நூலிழையில் உயிர் தப்பினார் உ.பி. முதலமைச்சர் - அவசரமாக தரையிறக்கப்பட்ட ஹெலிகாப்டர்
Yogi Adityanath
By Nandhini
லக்னோ செல்வதற்காக ஹெலிகாப்டரில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் புறப்பட்டார். அவர் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ஹெலிகாப்டர் மீது பறவை மோதியது.
இதனால், ஹெலிகாப்டரில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டது. இதனையடுத்து, அவசர அவசரமாக ஹெலிகாப்டர் தலையிறக்கப்பட்டது. இச்சம்பவத்தில் உத்தரப்பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.