பல ஆண்டுகளுக்குப் பிறகு தாயை சந்தித்த யோகி... - நெகிழ்ச்சி சம்பவம் - வைரலாகும் புகைப்படம்

By Nandhini May 04, 2022 07:07 AM GMT
Report

உத்திர பிரதேச முதல்வராக 2-வது முறையாக பதவியேற்றுள்ள பாஜகவை சேர்ந்த யோகி ஆதித்யநாத்.

இவர் தனடு டுவிட்டர் பக்கத்தில், தனது தாயுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில், அவரது தாயாரின் கால்களைத் தொட்டு வணங்கியுள்ள நிலையில், "அம்மா" என குறிப்பிட்டிருக்கிறார்.

யோகி ஆதித்யநாத், பல ஆண்டுகளுக்குப் பிறகு தன்னுடைய தாயை சந்தித்துள்ளார். அதுவும், முதல்வராக பதவியேற்ற பின் முதல் முறையாக தனது கிராமத்திற்கு அவர் சென்றிருக்கிறார்.

இதற்கு முன்பு, கடந்த 2020ம் ஆண்டு ஏப்ரல் 21ம் தேதி யோகியின் தந்தை ஆனந்த் பிஷ்ட்டின் இறந்தபோதும் கூட இறுதிச் சடங்கில் அவர் பங்கேற்கவில்லை.

ஏனென்றால், கொரோனா தொற்று பரவல் காரணமாக அவரால் கலந்து கொள்ள முடியாமல் போனது என்பது குறிப்பிடத்தக்கது.  

பல ஆண்டுகளுக்குப் பிறகு தாயை சந்தித்த யோகி... - நெகிழ்ச்சி சம்பவம் - வைரலாகும் புகைப்படம் | Yogi Adityanath