இந்திய அரசால் யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கு மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தேர்வு

By Nandhini May 02, 2022 10:46 AM GMT
Report

இந்திய அரசாங்கத்தின் ஆயுஷ் அமைச்சகத்தால் யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கு 100 நிறுவனங்களில் ஒன்றாக மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது

மொரார் ஜி தேசாய் தேசிய யோகா நிறுவனம், ஆயுஷ் அமைச்சகம் மற்றும் மத்திய அரசு இணைந்து 2022 யோகா மஹோத்சவத்தினை உலகெங்கும் நடத்தி வருகின்றன.

உலக யோகா தினத்தை முன்னிட்டு 100 நாட்கள், 100 அமைப்புகள் மற்றும் 100 இடங்கள் என பல்வேறு நாடுகளில் யோகாவின் மகத்துவத்தைப் பரப்பும் வகையில் நிகழ்ச்சிகள் நடந்து வருகின்றன.

இதில் யோகா ஆசிரியர்கள், நிபுணர்கள் மற்றும் அறிவியல் அறிஞர்கள் யோகாவை பெருமைப்படுத்துகின்றனர். பொதுமக்களிடையே யோகாவில் விழிப்புணர்வை ஏற்படுத்த இதற்காக உலகெங்கும் 100 நிறுவனங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

தமிழகத்தில் இருந்து மட்டும் இரண்டு நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. அவற்றில் சென்னை மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனமும் ஒன்றாகும்.

சென்னையை அடுத்துயுள்ள காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆய்வு நிறுவனத்தில் இதற்கான யோகா திருவிழா 28-04-2022 அன்று நடைபெறுகிறது. அதில் பொது யோகா நெறிமுறை பயிற்சிகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பல்கலைக் கழக மாணவர்கள் கலந்து கொள்கின்றனர்.

இதைத்தொடர்ந்து சமூகவலைத்தளம் வாயிலாக கருத்தரங்கம், பயிற்சிப் பட்டறை மற்றும் யோகா தொடர்பான சொற்பொழிவுகளும் தலைசிறந்த யோகிகளால் நடத்தப்படுகின்றன. கலந்து கொள்கின்ற அனைவருக்கும் கட்டணமில்லா சான்றிதழ் வழங்கப்படும்.

பங்கேற்க விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட இணைய வழியின் மூலம் கலந்துகொள்ளலாம்: -

https://forms.gle/kCiDpjTv11dDgJb96

இதற்கான ஏற்பாடுகளை நிகர்நிலைபல்கலைக்கழக உறுப்புக் கல்லூரிகள் மிக விமர்சையாக செய்து வருகின்றன. 

இந்திய அரசால் யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கு மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தேர்வு | Yoga

இந்திய அரசால் யோகா நிகழ்ச்சியை நடத்துவதற்கு மீனாட்சி உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் தேர்வு | Yoga