ரூ.1.46 கோடியில் அதற்காக அறுவை சிகிச்சை; மோசமான விளைவுகள் - குமுறும் இளைஞர்!
உயரத்தை அதிகரிப்பதற்காக செய்து கொண்ட அறுவை சிகிச்சையால் தற்போது அவதிப்படுவதாக இளைஞர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
அறுவை சிகிச்சை
கொலம்பியாவை சேர்ந்தவர் ஜெபர்சன் கோசியோ என்ற 29 வயது இளைஞர். முதலில் 5 அடி 8 அங்குலம் இருந்த இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன் அறுவை சிகிச்சையின் மூலம் தனது உயரத்தை 6 அடியாக உயர்த்தியுள்ளார்.
இந்த அறுவை சிகிச்சைக்காக சுமார் 1.46 கோடி ரூபாய் செலவிட்டதாக அவர் கூறியுள்ளார். ஆனால் அறுவை சிகிச்சைக்குப் பிறகு, உயரம் அதிகரிப்பை விட பிரச்சினை அதிகரித்துள்ளதாகவும், இதனால் மிகுந்த வேதனையில் இருப்பதாகவும், சரியாக தூங்க கூட முடியவில்லை என்றும் ஜெபர்சன் தெரிவித்துள்ளார்.
குமுறும் இளைஞர்
இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு வலி அதிகரித்துள்ளதாம். இரவு மாத்திரை சாப்பிட்டாலும் தூக்கம் வரவில்லை. தற்போது வலியை நிறுத்துவதற்கு மற்றொரு அறுவை சிகிச்சை செய்ய போகிறாராம்.
மேலும், தசைகள் மற்றும் எலும்புகளை இணைக்கும் அறுவை சிகிச்சையும் செய்ய வேண்டியுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனவே, அழகுக்காக நீங்கள் செய்யும் காரியம் மோசமான பின்விளைவுகளை விளைவிக்கும் என சுகாதார வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.