விபத்துக்கு பின் பொது நிகழ்ச்சியில் பங்கேற்ற யாஷிகா - ரசிகர்கள் உற்சாகம்
நடிகை யாஷிகா ஆனந்த் கடந்த ஜூலை மாதம் நண்பர்களுடன் பாண்டிச்சேரி சென்று சென்னைக்கு நோக்கி திரும்பிக்கொண்டிருந்த போது கார் விபத்தில் சிக்கினார்.
இதனால், விபத்தில் சிக்கிய யாஷிகாவுடன் பெண் தோழி ஒருவர் இறந்துவிட்டார். விபத்துக்கு பிறகு நான்கு மாதங்கள் சிகிச்சையில் இருந்த யாஷிகா தற்போது முழுமையாக குணமாகி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக்கொண்டுள்ளார்.
இந்நிலையில் இந்த புகைப்படம் வைரலாகிய நிலையில், 4 மாதத்திற்கு பின்பு கடை நிகழ்ச்சியில் ஒன்று கலந்துகொண்டதால் கையில் வாக்கிங் ஸ்டிக்கை பிடித்தப்படியே வந்துள்ளார்.
இதனிடையே, யாஷிகாவின் கம் பேக்கிற்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும், யாஷிகா இனி திரைப்படங்களிலும் நடிக்க கவனம் செலுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இன்ஸ்டாகிராமில் பகிர்ந்த இந்த புகைப்படத்திற்கு , ‘என்னைச் சுற்றியிருந்த நெருப்பை விட எனக்குள் இருந்த நெருப்பு பிரகாசமாக எரிந்ததால் நான் உயிர் பிழைத்தேன்' என்று பதிவிட்டு இருக்கிறார்.