வாளுடன் இருக்கும் யாஷிகா ஆனந்தின் புது தோற்றம் - ஆச்சரியத்தில் ரசிகர்கள்
நடிகை யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகியுள்ளது.
துருவங்கள் பதினாறு, இருட்டறையில் முரட்டுக்குத்து போன்ற படங்களில் நடித்த யாஷிகா ஆனந்த் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக் கொண்ட பின் ரசிகர்களிடையே பிரபலம் ஆனார்.
எப்போதும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவ் ஆக இருக்கும் யாஷிகா கவர்ச்சியான புகைப்படங்களை அவ்வப்போது வெளியிடுவது வழக்கம். பல படங்களில் பிசியாக நடிக்க தொடங்கிய அவருக்கு கடந்த ஆண்டு இறுதியில் நடந்த சாலை விபத்து அவரது வாழ்க்கையையே 3 மாதங்களுக்கு புரட்டி போட்டது என்றே சொல்லலாம்.
எழுந்து நடக்க முடியாத அளவுக்கு படுகாயம் அடைந்த அவர் நீண்ட சிகிச்சைக்குப் பிறகு தற்போது இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி மீண்டும் படங்களில் நடிக்க தொடங்கியுள்ளார். அதேபோல் கவர்ச்சி போட்டோஷூட்களை நடத்தியும் வருகிறார்.
அந்த வகையில் கையில் வாளுடன் வொண்டர் வுமன் ஸ்டைலில் போட்டோஷூட் எடுத்து அதன் புகைப்படங்களை சமூக வலைத்தளத்தில் பதிவேற்றம் செய்துள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.