குற்ற உணர்ச்சியுடன் இனி வாழ்வது பெரும் துயரம் - நடிகை யாஷிகா ஆனந்த்!

Yashika Aannand Feeling
By Thahir Aug 03, 2021 12:56 PM GMT
Report

தன் வாழ்நாள் முழுக்க இனி குற்ற உணர்வுடனேதான் வாழ முடியும் என நடிகை யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

குற்ற உணர்ச்சியுடன் இனி வாழ்வது பெரும் துயரம் - நடிகை யாஷிகா ஆனந்த்! | Yashika Aannand Feeling

சில தினங்களுக்கு முன்பு நடந்த சாலை விபத்தில், அவரது தோழி பவானி உயிரிழந்த நிலையில், மற்ற 2 நண்பர்களுடன் யாஷிகா ஆனந்த் சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், விபத்துக்குப் பிறகு முதல்முறையாக தன் தோழியின் இழப்பு குறித்து அவர் பதிவிட்டுள்ளார்.

அதில், தன் வாழ்க்கையில் பவானி உயிரிழப்புக்கு தான் காரணமாவேன் என ஒருபோதும் நினைத்ததில்லை எனவும், அதனால், அந்த குற்ற உணர்ச்சியுடன் இனி வாழ்வது பெரும் துயரம் எனவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், மறைந்த பவானி மீண்டும் தன்னிடம் வருவார் என தான் நம்புவதாகவும் நடிகை யாஷிகா ஆனந்த் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.