2 மடங்கு அதிக தொகை கொடுத்து ‘கேஜிஎஃப் - 2’ படத்தை கைப்பற்றிய நிறுவனம் - OTTயில் ரிலீஸ் தேதி அறிவிப்பு
உலகமெங்கும் மிகவும் பிரமாண்டமாக ஏப்ரல் 14ம் தேதி, யாஷின் கே.ஜி.எப் 2 திரைப்படம் வெளியானது.
கேஜிஎஃப் 2 ஆம் பாகம் தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியாகியுள்ளது. இப்படத்தில் சஞ்சய் தத், ரவீனா டாண்டன், பிரகாஷ் ராஜ், ஸ்ரீநிதி ஷெட்டி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
இப்படத்தின் காட்சிகள், இருக்கையின் நுனியில் அமரச் செய்து ரசிகர்களை ரசிக்க வைக்கும்படி அமைந்துள்ளது. கேஜிஎஃப் 2 படத்திற்கான டிக்கெட்டுகள் லட்சக்கணக்கில் விற்பனையாகி வருகிறது. பாக்ஸ் ஆபிஸில் மிகப்பெரிய கலெக்ஷனை கேஜிஎஃப் 2 திரைப்படம் பெற்றிருக்கிறது.
100 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ரிலீசுக்கு முன்பே போட்ட பணத்தை விட பல மடங்கு அதிகமான லாபத்தை பெற்றுவிட்டது.
கேஜிஎஃப் 2 படம் உலகம் முழுவதும் 1000 கோடிக்கு மேல் கடந்து மாபெரும் வசூல் சாதனையை படைத்துள்ளது.
இந்நிலையில், இப்படத்தின் ஓடிடி உரிமையை அமேசான் பிரைம் நிறுவனம் கைப்பற்றி இருக்கிறது. இந்நிறுவனம் 320 கோடி ரூபாய் கொடுத்து ஓடிடி உரிமையை கைப்பற்றி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் பட்ஜெட்டை விட 2 மடங்கு அதிகமாம். இதனால் படக்குழு மிகுந்த உற்சாகத்தில் உள்ளனர். இப்படம் வருகிற மே 27-ம் தேதி ஓடிடியில் வெளியிடப்பட இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.