பிரபல நடிகையின் சமூக வலைத்தள பக்கம் முடக்கம் - அதிர்ச்சியில் ரசிகர்கள்!
பிரபல நடிகை யாமி கவுதமின் வலைத்தள கணக்கு தற்போது மர்ம நபர்களால் முடக்கப்பட்டுள்ளது.
தமிழில் கவுரவம்,தமிழ் செல்வியும் தனியார் அஞ்சலும் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு மற்றும் இந்தியிலும் அதிக படங்களில் நடித்து இருக்கிறார்.
இந்நிலையில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு கோடியே 50 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பின் தொடர்கிறார்கள்.
இதையடுத்து யாமி கவுதம் தனது ட்விட்டர் பக்கத்தில் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்டுள்ளதாகவும்,அதனை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சர்ச்சைக்குரிய புகைப்படங்கள் வெளிவந்தார் அதனை கண்டுகொள்ள வேண்டாம் என ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
யாமி கவுதமின் இன்ஸ்டாகிராம் பக்கம் முடக்கப்பட்ட சம்பவம் அவர்களது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.