தனுஷூக்கு வந்த சோதனை...சோகத்தில் ரசிகர்கள்.. யூட்யூப் தளத்தில் நீக்கப்பட்ட பாடல்...
நடிகர் தனுஷின் தயாரிப்பு நிறுவனமான வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் யூட்யூப் சானல் ஹேக் செய்யப்பட்ட சம்பவம் திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழ் சினிமாவில் பன்முகத்திறமை கொண்ட நடிகர்களில் ஒருவரான நடிகர் தனுஷ் சிவார்த்திகேயன் நடிப்பில் வெளியான எதிர்நீச்சல் படத்தின் மூலம் தயாரிப்பாளராக அவதாரம் எடுத்தார். வுண்டர்பார் பிலிம்ஸ் என பெயரிடப்பட்ட அந்த நிறுவனத்தின் மூலம் காக்கிச்சட்டை, வேலையில்லா பட்டதாரி, காலா உள்ளிட்ட பல படங்களை தயாரித்திருந்தார்.
கடைசியாக மாரி-2 படத்துக்குப் பின் எந்த படத்தையும் தயாரிக்காத நிலையில் வுண்டர்பார் பிலிம்ஸ் நிறுவனத்தின் யூட்யூப் சானல் ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால் திரையுலகினர், ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டது. இந்த சேனலில் தனுஷ் நடித்த மாரி-2 படத்தில் இடம்பெற்ற ரௌடி பேபி பாடலும் இடம் பெற்றிருந்தது.
யாரும் எதிர்பார்க்காத அளவுக்கு ரசிகர்களின் விருப்பத்தைப் பெற்ற இந்த பாடலுக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைக்க பிரபுதேவா நடனம் அமைத்திருந்தார். பாடலை தனுஷ் எழுத அவரே பாடகி தீயுடன் சேர்ந்து பாடியிருந்தார். தனுஷ், சாய் பல்லவி இடம் பெற்ற இப்பாடல் சுமார் 120 கோடி பார்வைகளை பெற்று பல சாதனைகளை படைத்தது.
முடக்கப்பட்ட சேனலை வெளிக்கொண்டு வர தனியார் நிறுவனத்தின் தொழில்நுட்பக் குழு முயன்று வருவதோடு யூடியூப் இந்திய நிறுவனத்திற்கும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதேபோல் லைகாவின் யூடியூப் சேனலும் முடக்கப்பட்டதால் வேண்டுமென்றே யாரோ இந்த செயலில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.