WTC Final-ல் டெய்லரை விமர்சித்த 2 பார்வையாளர்கள் உடனே வெளியேற்றம்!

icc sports match issue wtc finals
By Anupriyamkumaresan Jun 23, 2021 10:07 AM GMT
Anupriyamkumaresan

Anupriyamkumaresan

in கிரிக்கெட்
Report

உலக டெஸ்ட் சாம்பின்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இனவெறி கருத்துக்களைத் தெரிவித்த இரண்டு பார்வையாளர்கள் உடனே வெளியேற்றப்பட்டனர்.

இங்கிலாந்து சௌதாம்ப்டானில் இந்தியா, நியூசிலாந்து அணிகள் பங்கேற்ற உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டி நடைபெற்று வருகிறது.

WTC Final-ல் டெய்லரை விமர்சித்த 2 பார்வையாளர்கள் உடனே வெளியேற்றம்! | Wtc Final Match Issue

நேற்று நடைபெற்ற ஆட்டத்தின்போது வீரர்களை உற்சாகப்படுத்த, பார்வையாளர்கள் பாடல்களைப் பாடினர். விராட் கோலியும் அவ்வப்போது ரசிகர்களை நோக்கி “கரகோஷங்கள்” எழுப்புங்கள் என கூறிக் கொண்டே இருந்தார்.

பார்வையாளர்களும் இடைவிடாது, வீரர்களை உற்சாகப்படுத்தி வந்தனர். இந்நிலையில் நேற்றைய ஆட்டத்தின்போது ராஸ் டெய்லர் உட்பட சில வீரர்கள் இனவெறி பிரச்சினையை சந்திருக்கிறார்கள்.

WTC Final-ல் டெய்லரை விமர்சித்த 2 பார்வையாளர்கள் உடனே வெளியேற்றம்! | Wtc Final Match Issue

இதுகுறித்து போட்டி முடிந்த பிறகு பேசிய ஐசிசியின் நிர்வாகி ஒருவர், பீல்டிங் செய்துகொண்டிருந்த ராஸ் டெய்லர் உட்பட நியூசிலாந்து வீரர்களை சிலர் இன ரீதியாக விமர்சித்ததாகப் புகார் வந்தது. உடனே சம்பவ இடத்திற்குச் சென்று இரண்டு பார்வையாளர்களை அரங்கைவிட்டு வெளியேற்றினோம் என கூறியுள்ளார்.

மேலும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது, விரைவில் குற்றவாளிகள் யார் என விரைவில் தெரிந்துவிடும் என்றும் இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாத அளவுக்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

WTC Final-ல் டெய்லரை விமர்சித்த 2 பார்வையாளர்கள் உடனே வெளியேற்றம்! | Wtc Final Match Issue

மேலும், இதுகுறித்து பேசிய நியூசிலாந்து அணி வேகப்பந்து வீச்சாளர், “முதல்முறையாக நாங்கள் இப்படி பிரச்சினையை எதிர்கொள்கிறோம் என்றும் எந்த அணிக்கும், எந்த வீரருக்கும் இப்படி நடக்கக் கூடாது எனவும் தெரிவித்துள்ளார்.