மரத்தில் இருந்து ‘புனித நீர்’.. விழுந்து வணங்கிய பக்தர்கள் - இறுதியில் நடந்த ட்விஸ்ட்
மரத்தில் இருந்து 'புனித நீர்' வருவதாக மக்கள் வணங்கிய சம்பவம் கவனம் பெற்றுள்ளது.
புனித நீர்
புனேவில், பிரேம்லோக் பூங்கா அருகே மே-பூ மரம் என்று அழைக்கப்படும் குல்மோகர் மரம் ஒன்று உள்ளது. இந்த மரத்தின் தண்டில் இருந்து திடீரென தண்ணீர் ஊற்று போல் வெளியேற தொடங்கியது.
இதனைக் கண்ட மக்கள், புனித நீர் என நினைத்து அதனை வழிபடத் தொடங்கிவிட்டனர். இந்த தண்ணீருக்கு நோய்களை குணப்படுத்தும் தன்மை உள்ளதாக நம்பி, சிலர் அந்த தண்ணீரை தீர்த்தம் போல் பருகியுள்ளனர்.
இறுதியில் ட்விஸ்ட்
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. தொடர்ந்து அதிகாரிகள் இதுகுறித்து விசாரணை நடத்திய நிலையில், மரத்தில் இருந்து தண்ணீர் வெளியேறுவதற்கான காரணத்தை கண்டறிந்தனர்.
நிலத்திற்கு அடியில் செல்லும் குழாயில் ஏற்பட்ட உடைப்பு காரணமாக தண்ணீர் கசிந்துள்ளது. குழாயில் உடைப்பு ஏற்பட்ட இடத்தின் அருகே மரம் இருந்ததால், மரத்தின் தண்டு வழியாக தண்ணீர் கசிந்தது போல் தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளது என்று விளக்கமளித்துள்ளனர்.