இந்தியாவில் இந்த நகரத்தில் இறைச்சி சாப்பிட தடை - காரணத்தை கேட்டா ஆடிப் போயிடுவீங்க!

Healthy Food Recipes India World
By Vidhya Senthil Dec 27, 2024 11:30 AM GMT
Report

இறைச்சி சாப்பிடுவதை தடை செய்த உலகின் முதல் நகரம் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

இறைச்சி

உலகில் உள்ள அனைத்து நாட்டில் உள்ள அனைத்து மக்களும் சைவம் மற்றும் அசைவ உணவுகளை விரும்பி உண்ணுகின்றனர். ஒரு சில நாடுகளில் குறிப்பிட்ட உணவுகளுக்குத் தடை விதிக்கப்படும். அப்படி இறைச்சி சாப்பிடுவதை ஒரு நகரம் தடை செய்துள்ளது.

இந்த நகரத்தில் இறைச்சி சாப்பிட தடை

அது இந்தியாவில் உள்ளது என்றால் நம்ப முடிகிறதா? ஆம் அது,குஜராத்தின் பாவ்நகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு சிறிய நகரம் பாலிதானா தான். இது ஒரு முக்கிய ஜைன புனித யாத்திரை ஸ்தலமாக அறியப்படுகிறது.

நீங்க எதிர்பார்த்தது இல்ல.. இந்தியாவில் அசைவம் அதிகம் சாப்பிடும் மாநிலம் எது தெரியுமா?

நீங்க எதிர்பார்த்தது இல்ல.. இந்தியாவில் அசைவம் அதிகம் சாப்பிடும் மாநிலம் எது தெரியுமா?

 தடை

ஜெயின் சமூகத்தின் மதக் கொள்கைகளை மதிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாகத் தடையை அமல்படுத்தியதாகக் கூறப்படுகிறது. இவர்களது நோக்கம் சிறிய உயிர்கள் முதல் பெரிய உயிர்கள் வரை கொல்லக்கூடாது என்பது தான்.

இந்த நகரத்தில் இறைச்சி சாப்பிட தடை

இதனால் ஜெயின் துறவிகள் சுமார் 250 இறைச்சிக் கடைகளை மூடக் கோரிய 200க்கும் மேற்பட்ட போராட்டம் நடத்தினர். இதன் காரணமாக இறைச்சி விற்பனை மற்றும் நுகர்வு ஆகியவற்றைத் தடை செய்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.