சீனாவில் இளைஞர் உயிரை பறித்த கோகோ-கோலா! அதிர்ச்சி சம்பவம்

world-viral-news
By Nandhini Sep 29, 2021 06:19 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

சீனாவில் இளைஞர் ஒருவர் 1.5 லிட்டர் கோகோ-கோலா குடித்ததால் திடீரென உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சீனாவில் உள்ள பெய்ஜிங் நகரத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் 1.5 லிட்டர் கோகோ-கோலாவை வாங்கினார்.

அந்த கோகோ - கோலாவை 10 நிமிடத்தில் குடித்து முடித்திருக்கிறார். இதனையடுத்து, சில மணி நேரத்தில் அவரது வயிறு உப்புசமானது. இதனால், வயிறுப் பகுதி வீங்கியது.

இதனையடுத்து அவருக்கு கடுமையான வயிற்று வலி ஏற்பட்டது. உடனடியாக அவரது பெற்றோர்கள் சாவோயாங் மருத்துவமனைக்கு அழைத்து சென்று அனுமதித்தார்கள். அங்கே மருத்துவர்கள் சிடி ஸ்கேன் எடுத்து பார்த்ததில் அவர் குடலில் அசாதாரண வாயு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அளவுக்கு அதிகமாக குளிர்பானம் அருந்தியதால் கல்லீரலில் ஆக்சிஜன் தட்டுப்பாடு உருவாகியதால் நரம்புகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி அந்த இளைஞர் பரிதாபமாக உயிரிழந்தார். அதிகப்படியான குளிர்பானத்தை பருகி வாயு அடைப்பால் அந்த இளைஞர் உயிரிழந்ததாக மருத்துவமனை மருத்துவர்கள் விளக்கம் கொடுத்தனர்.    

சீனாவில் இளைஞர் உயிரை பறித்த கோகோ-கோலா! அதிர்ச்சி சம்பவம் | World Viral News