தாலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கனி காயம்! வெளியான ரகசிய தகவல்

world-viral-news
By Nandhini Sep 07, 2021 09:27 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியுள்ளனர். இதனையடுதது, அமெரிக்க படைகள் முற்றிலும் வெளியேறி விட்டது. இதனையடுத்து, ஆட்சி அதிகாரம் தங்கள் வசமானதாக அறிவித்த தாலிபான்கள் விரைவில் புதிய அரசு அமையும் என்று தெரிவித்தனர். தாலிபான் படைகள் காபூல் நகரத்தின் நிர்வாகத்தை கையில் எடுத்துக் கொண்டனர்.

இதனையடுத்து, அவர்களின் அட்டூழியங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், புதிய அரசில் தாலிபான் பயங்கரவாத அமைப்பை நிறுவியவர்களில் ஒருவரும் அந்த அமைப்பின் தற்போதைய தலைவருமான முல்லா அப்துல் கனி பரதருக்கு அதிபர் பதவி வழங்கப்படும் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் புதிய அரசை அமைப்பது தொடர்பாக தாலிபான் பயங்கரவாத அமைப்புக்கும், ஹக்கானி வலைக்குழுவுக்கும் இடையே அண்மையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.

அந்த பேச்சுவார்த்தையில், ஹக்கானி குழுவின் தலைவர் ஆனஸ் ஹக்கானிக்கும் தாலிபான் தலைவர் முல்லா அப்துல் கனி பரதருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. பிறகு, இந்த வாக்குவாதம் முற்றி இரு தரப்புக்குமிடையில் சலசலப்பை உண்டாக்கி, கைகலப்பு ஏற்பட்டது. இந்த மோதலில் முல்லா அப்துல் கனி பரதர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

இதனையடுத்து, இரு தரப்புக்கும் இடையிலான இந்த பிரச்சினையை சுமூகமாக பேசி தீர்த்து வைப்பதற்காக பாகிஸ்தான் உளவு அமைப்பின் தலைவர் பைஸ் ஹமீது காபூலுக்கு விரைந்து சென்றார்.

அவர் இரு தரப்பையும் சமாதானம் செய்யும் முயற்சியில் ஈடுபட்டதாக தகவல்கள் வெளியாகியின. இதனையடுத்து, ஆப்கானிஸ்தானில் விரைவில் இடைக்கால அரசு அமையும் என தாலிபான் பயங்கரவாத அமைப்பின் தலைவர் ஜபிஹுல்லா முஜாஹித் நேற்று கூறினார் என்பது குறிப்பிடத்தக்கது.

தாலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கனி காயம்! வெளியான ரகசிய தகவல் | World Viral News