600 தலிபான்கள் கொலை, 1000 பேர் சரண் - பஞ்ச்ஷீர் மாகாணத்தில் வெடிக்கும் மோதல்

world-viral-news
By Nandhini Sep 05, 2021 09:53 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானை தாலிபான்கள் கைப்பற்றியதையடுத்து, அமெரிக்கா வெளியேறியது. தற்போது ஆப்கானிஸ்தானிலிருந்து சர்வதேச படைகள் முழுமையாக வெளியேறி விட்ட, நிலையில் புதிய அரசை அமைப்பதில் தலீபான்கள் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

அதேவேளையில், ஆப்கானிஸ்தானில் மொத்தமுள்ள 34 மாகாணங்களில் 33 மாகாணங்களை தலீபான்கள் கைப்பற்றிவிட்டனர். இருந்தபோதும், இந்துகுஷ் மலைத்தொடருக்கு அருகில் உள்ள பஞ்ச்ஷீர் மாகாணத்தை மட்டும் அவர்களால் கைப்பற்ற முடியாத நிலை இருந்தது.

சுமார் 2 லட்சம் பேர் வாழும் பஞ்ச்ஷீர் மாகாணம் நீண்ட காலமாகவே தலீபான்களுக்கு எதிராக போராடி வருகிறது. இந்த மாகாணம் இப்போது அல்ல, எப்போதுமே ஆதிக்ககாரர்களிடம் அடிபணிந்தது கிடையாது. 1980-களில் அரச படைகளுக்கு எதிராகவும், 1990-களில் தலிபான்களுக்கு எதிராகவும் பஞ்ச்ஷீர் மாகாண போராளிகள் சண்டையிட்டுள்ளனர்.

அந்த வகையில், தற்போதும் ஆப்கானிஸ்தானின் இடைக்கால அதிபராக தன்னைத் தானே அறிவித்துக் கொண்டுள்ள துணை அதிபர் அமருல்லா சாலே தலைமையில் பஞ்ச்ஷீர் போராளிகள் தலிபான்களுடன் சண்டையிட்டு வருகிறார்கள். இந்நிலையில், சண்டையில் தலிபான்கள் தரப்பில் 600 பேர் கொல்லப்பட்டுள்ளதாக பஞ்ச்ஷீர் போராளிகள் குழு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், 1000த்திற்கும் மேற்பட்ட தலிபான்கள் பிடிபட்டுள்ளனர் என்றும், அவர்கள் சரண் அடைந்து விட்டதாகவும் போராளிகள் அந்த குழு அறிவிபிபல் தெரிவித்துள்ளது. அதேவேளையில், பஞ்ச்ஷீர் மாகாணத்தை கைப்பற்றும் முயற்சி தொடர்ந்து நடைபெற்று வருவதாக தலிபான்கள் வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

தலைநகர் பசாரக் செல்லும் சாலையில் கண்ணிவெடிகள் அதிக அளவில் இருப்பதால், முன்னேறிச்செல்லும் பணியில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தலிபான்கள் வட்டாரத்திலிருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. 

600 தலிபான்கள் கொலை, 1000 பேர் சரண் - பஞ்ச்ஷீர் மாகாணத்தில் வெடிக்கும் மோதல் | World Viral News