ஆப்கான் பஞ்ச்ஷீர் பகுதி தாலிபான்களிடம் சிக்கி விடுமா? தொடர்ந்து வலுக்கும் போராட்டம்!
ஆப்கானிஸ்தானில் உள்ள பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் தாலிபான்கள் மிகப்பெரிய தாக்குதலை நடத்தியிருக்கிறார்கள். தலிபான் பயங்கரவாதிகள் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கை சுற்றி வளைத்துள்ளனர்.
இதனையடுத்து, கடுமையான குண்டு வீச்சு அங்கு நடைபெற்றது. தாலிபான்களிடம் இப்போது அமெரிக்காவிலிருந்து பெறப்பட்ட அதிநவீன ஆயுதங்கள் உள்ள போதிலும் அவர்களால் பஞ்சஷீரை கைப்பற்ற முடியவில்லை.
தாலிபான்களுக்கும், பஞ்சஷீரில் உள்ள போராளிகளுக்கும் இடையிலான இந்த குண்டுவெடிப்பு தாக்குதலில், இரு தரப்பிலும் பலர் காயமடைந்தார்கள். பஞ்ச்ஷீர் கிளர்ச்சியாளர்களால் வெளியிடப்பட்ட வீடியோவில் அவர்கள் தலிபான்கள் மீது ராக்கெட்டுகளை வீசுவதை காண முடிந்தது.
கடந்த 3 நாட்களில் பஞ்ச்ஷீர் பள்ளத்தாக்கில் நடந்த தாக்குதல்களில் தாலிபான்கள் படுதோல்வியை அடைந்தார்கள். இதனையடுத்து, வியாழக்கிழமை மாலை தாலிபான்கள் மிகப்பெரிய தாக்குதலை நடத்தினார்கள்.
ஆகஸ்ட் 15 அன்று காபூலைக் கைப்பற்றிய பிறகு, தாலிபான்கள் பஞ்ச்ஷீரைப் பிடிக்க முயற்சி செய்து வருகிறார்கள்.
தலிபான் செய்தித் தொடர்பாளர் ஜபியுல்லா முஜாஹித் இது குறித்து கூறியதாவது -
தங்கள் போராளிகள் பஞ்ச்ஷீரில் நுழைந்து சில பகுதிகளைக் கைப்பற்றி இருக்கிறார்கள். ஆனால், தலிபான்களின் மூன்று தாக்குதல்களும் தோல்வியடைந்ததாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. பஞ்ச்ஷீர் போராளிகள் அதிக எண்ணிக்கையிலான தலிபான்களைக் கொன்றனர். இப்பிரச்சினையை போர் மூலம் தீர்க்க முடியாது.
இருப்பினும், இரு தரப்பினரும் தங்கள் கூற்றை ஆதரிக்கும் உறுதியான ஆதாரங்களை இதுவரை கொடுக்கவில்லை. தலிபான்கள் பஞ்ச்ஷீர் எல்லா பக்கங்களிலும் சூழ்ந்துள்ளனர்.
கிளர்ச்சியாளர்களுக்கு வெற்றி சாத்தியமில்லை என்றார். ஆயிரக்கணக்கான துருப்புகள் எதிர்ப்பு ஏதும் இல்லாமல் தலிபான்களிடம் சரணடைந்தனர். ஆனால், ஆப்கானிஸ்தானை கைப்பற்றியுள்ள தாலிபான்களுக்கு, பஞ்ச்ஷீர் பகுதியை இன்று வரை கட்டுபாட்டிற்குள் கொண்டு வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
