காபூல் விமான நிலையம் அருகே நடந்த குண்டு வெடிப்பு - உயிரிழப்பு 108 ஆக உயர்வு

world-viral-news
By Nandhini Aug 27, 2021 10:11 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் விமான நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 108ஆக அதிகரித்துள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியுள்ளனர்.

இந்நிலையில், அந்நாட்டிலிருந்து நூற்றுக்கணக்கானோர் காபூலில் உள்ள விமான நிலையத்தை முற்றுகையிட்டு வருகிறார்கள். இந்நிலையில், விமான நிலையம் அருகே ஒரு வெடிகுண்டும், அடுத்த சில நிமிடங்களில் அருகில் உள்ள ஹோட்டலிலும் மற்றொரு குண்டும் வெடித்து சிதறியது. இந்த குண்டுவெடிப்பில் அமெரிக்க ராணுவ வீரர்கள் உட்பட 70க்கும் மேற்பட்டோர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

தற்போது பலி எண்ணிக்கை 108 ஆக அதிகமாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. வெடிகுண்டு தாக்குதல் நடந்ததால் விமான சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. தற்போது, விமானநிலையத்திலிருந்து மீண்டும் விமானம் மூலம் மீட்புப்பணி தொடங்கி உள்ளது.

விமான நிலையம் அருகே நிகழ்ந்த இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாதிகள் தான் காரணம் என அமெரிக்கா குற்றம் சாட்டியுள்ளது. நிலைமை மோசமடைந்தாலும் மக்களை பாதுகாப்பாக வெளியேற்றுவதற்கான பணிகளை நிறுத்தப் போவதில்லை என அமெரிக்கா திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. 

காபூல் விமான நிலையம் அருகே நடந்த குண்டு வெடிப்பு - உயிரிழப்பு 108 ஆக உயர்வு | World Viral News