தலிபான்களா... நீங்க நிம்மதியாக இருக்க முடியாது... ஆட்சியையும் அமைக்க முடியாது: பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் எதிர்படை போர் முழக்கம்

world-viral-news
By Nandhini Aug 23, 2021 08:11 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

ஆப்கானிஸ்தானில் பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் தலிபான்களின் எதிர்ப்பு படையின் நடவடிக்கைகள் தற்போது தீவிரமடைந்து வருகிறது. இதனால் பல்வேறு நகரங்களிலிருந்து தலிபான்கள் பஞ்ஷிர் பள்ளத்தாக்கை நோக்கி விரைந்து வந்துக்கொண்டிருப்பதாக செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்திருக்கிறார்.

காபுலுக்கு வடக்கே பஞ்ஷிர் பள்ளத்தாக்கு உள்ளது. அந்த பள்ளத்தாக்கு நெடு ஆண்டு காலமாக தலிபான்களுக்கு எதிரான கோட்டையாக இருந்து வருகிறது.

இந்நிலையில், ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் வெளியேறி வருவதால், மெல்ல மெல்ல தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றி வருகின்றனர். தலைநகர் காபூல் மற்றும் கந்தகார் நகரங்களையும் கைப்பற்றியதுடன் ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சியை பிடித்திருக்கின்றனர்.

இந்நிலையில், மக்களை பாதுகாப்போம் என கூறிய தாலிபான்கள், மக்களை மிக மோசமாக நடத்தி வருவதாக தகவல்கள் வெளியானதையடுத்து, கைர் முகமது அந்தராபியின் தலைமையில் ஆப்கன் பொதுமக்கள் ஒன்று கூடி தலிபான் எதிர்ப்பு படை அமைத்துள்ளனர்.

தற்போது, தலிபான்களுக்கு எதிராக தாக்குதலில் ஈடுபட்டு வருகிறார்கள். அதனால், ஆப்கானிஸ்தானின் பாக்லானில் உள்ள பொல் - இ - ஹேசர், தே சலா மற்றும் பானு மாவட்டங்கள் கடந்த வெள்ளிக்கிழமை தாலிபன்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாக உள்ளூர் செய்திகள் தகவல் தெரிவித்துள்ளன.

அந்த தாக்குதலின் போது 60 தலிபான்கள் காயமடைந்ததாகவும், பலர் கொல்லப்பட்டதாகவும் ஆப்கனிஸ்தான் செய்தி நிறுவனம் அஸ்வாகா தெரிவித்திருக்கிறது. அதே நேரத்தில் இன்னும் பல மாவட்டங்களில் நோக்கி முன்னேற போவதாகவும் தலிபான் எதிர்ப்பு படை அறிவித்திருக்கிறது. ஆப்கானிஸ்தானின் முன்னாள் துணைத் தலைவர் அம்ருல்லா சலே , நாட்டின் தற்காலிகத் தலைவர் என்று அறிவித்து கொண்டுள்ளார்.

பஞ்ச்ஷிர் மாகாணத்தில் இருந்து தலிபான்களுக்கு எதிராக ஒரு எதிர்ப்பு முன்னணியை உருவாக்கி இருக்கிறார். கொல்லப்பட்ட தலிபான் எதிர்ப்பு தலைவர் அகமது ஷா மசூத்தின் மகன் அகமது மசூத், தலிபான் எதிர்ப்புப் படைகளின் தளபதியாகக் கருதப்படுகிறார்.

இந்நிலையில், தலிபான்களுக்கு எதிரான வலுவான தாக்குதல் நடந்த தலிபான் எதிர்ப்பு படை திட்டமிட்டிருப்பதாகவும், ஆப்கனிஸ்தானில் தங்கள் தலைமையில் தனி ஆட்சியை பிரகடனப்படுத்த அகமது மசூத் தரப்பு உறுதி செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தலிபான்கள் கட்டுப்பாட்டில் வராத பஞ்ஷர் பள்ளதாக்கு உள்ளிட்ட சில இடங்களை தலிபான்களிடம் சரணடையும் படி தலிபான்கள் எச்சரித்துள்ளனர்.

ஆனால், அதை தலிபான எதிர்ப்பு படையினர் பொருட்படுத்தவே இல்லை. இதனால் தலிபான்கள் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் கூறுகையில், நூற்றுக்கணக்கான தலிபான் போராளிகள் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்குக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

ஆப்கானிஸ்தானின் தலிபான்கள் இன்னும் கைப்பற்றாத சில பகுதிகளில் பஞ்ஷிர் பள்ளத்தாக்கும் ஒன்று என்று குறிப்பிட்டுள்ளனர். இதனையடுத்து, பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கில் ஆயுத வாகனங்களின் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. தலிபான் எதிர்ப்பு குழு புதிய ஆட்சி முறையை அறி

முகப்படுத்த விருப்பம் தெரிவித்துள்ளது.தேவைப்பட்டால் தலிபான்களை எதிர்த்து போருக்கு தயாராக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. எனவே தலிபான்களை எதிர்க்க அரசாங்க சார்பு மக்கள் அனைவரும் ஒவ்வொரு மாகாணத்தில் இருந்தும் பஞ்ச்ஷிர் பள்ளத்தாக்கை நோக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனால், ஆப்கானிஸ்தான் ராணுவ வீரர்கள் தங்கள் ஆயுதங்களை கைவிட்டுள்ளனர்.

இருப்பினும், இப்போது நாட்டின் பிற பகுதிகளில் தலிபான்களுக்கு எதிரான குரல்கள் தீவிரமடைந்து வருகிறது. அதே நேரத்தில், காபூலில் புதிய அரசாங்கம் அமைவதற்கு முன்பே தங்களுக்கு எதிரான கிளர்ச்சிக் குரல்களால் தலிபான்கள் கலக்கமடைந்திருக்கிறார்கள். மீண்டும் தலிபான்களுக்கு எதிராக ஒரு போர் உருவாகும் சூழல் அங்கு உருவாகி உள்ளது. 

தலிபான்களா... நீங்க நிம்மதியாக இருக்க முடியாது... ஆட்சியையும் அமைக்க முடியாது: பஞ்ஷிர் பள்ளத்தாக்கில் எதிர்படை போர் முழக்கம் | World Viral News