நிர்வாண உடல்... வித்தியாசமான தலை... இருட்டான பகுதியில் கேமராவில் சிக்கிய மர்ம உருவம்.. - தொடரும் ஆய்வு
அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்ட் என்ற நபர் வேட்டைக்காக நான் வைத்த கேமராவில் ஏலியன் உருவம் ஒன்று பதிவாகியுள்ளதாக தெரிவித்திருக்கிறார்.
பிரபஞ்சத்தில் பூமி என்பது ஒரு சிறிய கோள் தான். அந்த சிறிய கோளில் 6 அறிவு கொண்ட உயிரினமாக மனிதர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
சூரியக் குடும்பத்தைப் போல எத்தனையோ குடும்பங்கள் இந்த பிரஞ்சத்தில் இருக்கின்றன. அப்படியானால் பூமியைப் போல கணக்கில்லாத கோள்களும் இங்கிருக்கிறது.
அதனால் தான் நம்மைப் போல இன்னொரு கூட்டமும் எங்கேனும் வாழ வாய்ப்பு இருக்கிறதா என்று ஆராய்ச்சியாளர்கள் தொடர்ந்து ஆராய்ச்சி ஈடுபட்டு வருகிறார்கள். நம்மை பொறுத்தவரை அவர்கள் வேற்றுக்கிரக வாசிகள்.
யாரும் இருக்கலாம், எங்கேனும் இருக்கலாம் என்ற ஒரு வித எதிர்பார்ப்புடனே வேற்று கிரகவாசிகளின் தேடுதல் வேட்டை தொடர்ந்துக் கொண்டிருக்கிறது. அதேபோல் பூமிக்கும் அவ்வப்போது வேற்றுக்கிரக வாசிகள் வந்துபோவதாக சில செய்திகள் அடிபடுவதும் நாம் கேட்டுக்கொண்டுதான் இருக்கிறோம்.
100% உறுதிப்படுத்தப்பட முடியவில்லை என்றாலும் அவற்றை முழுமையாக மறுக்காமல் தொடர்ந்து ஆய்விலேயே ஈடுபட்டு வருகிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். இந்நிலையில், ஒரு வேற்றுக்கிரக வாசியின் புகைப்படம் அமெரிக்காவின் மொண்ட்டானா பகுதியில் வைரலாகி வருகிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த டொனால்ட் என்ற நபர் வேட்டைக்காக நான் வைத்த கேமராவில் ஏலியன் உருவம் ஒன்று பதிவாகி இருப்பதாக தெரிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் கூறியதாவது -
என் கேமராவில் பதிவான உருவம் ஒரு மனிதராக இருக்கலாம் என்று ஆரம்பத்தில் நான் நினைத்தேன். ஆனால் அதன் உருவம் என்னை சந்தேகப்பட வைத்தது. ட்ரான்ஸ்பரண்டாகவும் நிர்வாண உடலாகவும் அது இருந்ததை நான் உணர்ந்தேன்.
அதன் தலை சற்று வித்தியாசமாக குமிழி போல இருந்தது. எங்கள் பகுதியில் தொடர்ந்து சில மர்மமான சம்பவங்கள் நடைபெற்று வருகிறது. சாலையில் செல்லும் கார்கள் திடீரென நின்றுவிடும். இப்படியான சம்பவங்கள் சில சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
ஏலியன் தொடர்பான புகைப்படங்களும், தகவல்களும் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டிருக்கிறது. மறுபுறம் ஏலியன் தொடர்பான ஆய்வை தீவிரமாக செயல்படுத்தி வருகிறது நாசா.
ஏலியன் குறித்து தெரிவித்துள்ள நாசா, ஏலியன் ஏற்கெனவே பூமிக்கு வந்தும் இருக்கலாம். இன்னும் 100% உறுதிப்படுத்துவதற்கான ஆதாரம் கிடைக்கவில்லை. அதனால் ஆய்வுகள் தொடர்ந்து வருகிறது என்று தெரிவித்துள்ளது.