உலகின் பாதுகாப்பற்ற நகரங்கள் இவை? லிஸ்டில் வந்த சென்னை - அதிர்ந்த சென்னைவாசிகள்!!
உலகத்தில் வாழ்வதற்கு பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியல் NUMBEO என்ற தளத்தின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.
மனிதர்கள் பெரும்பாலும் தாங்கள் பிறக்கும் நகரங்களுக்கு அருகிலோ அல்லது அதே இடத்திலோ தான் வசிப்பார்கள். உலகின் எந்த இடத்தில் பிறந்த மனிதர்களானாலும் அவர்களுக்கு தங்கள் நாட்டின் மீதும் பிறந்த இடத்தின் மீது ஒரு அன்பும், பற்றும் இருந்து கொண்டே தான் இருக்கிறது.
அதே நேரத்தில், அந்த இடம் வாழ்வதற்கு தகுதியற்ற இடமாக இருக்குமேயானால் மனிதர்கள் தாங்கள் வாழும் இடத்தை விட்டு வேறொரு இடத்திற்கு சென்று தங்களது வாழ்க்கையை நடத்துவதும் பெருமளவில் இருந்து கொண்டே தான் இருக்கிறது. மனிதர்கள் வசிக்க பாதுகாப்பற்ற நகரங்களின் பட்டியல் அண்மையில் பல தரப்பட்ட ஆய்வுகளுக்கு பிறகு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
இதில், மொத்த உலகிலும் வாழவே சுத்தமாக தகுதியற்ற நகரமாக வெனிசுலா நாட்டின் தலைநகர் காரகஸ் நகரம் இடம்பெற்றுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்தடுத்த இடங்களில் தென் ஆப்பிரிக்காவின் தலைநகர் பிரிட்டோரியா, பப்புவா நியூ கினியாவின் தலைநகர் போர்ட் மோர்ஸ்பி, தென் ஆப்பிரிக்காவின் டர்பன் போன்ற நகரங்கள் இடம்பெற்றுள்ளன.
இந்த பட்டியலில் தமிழகத்தை சேர்ந்த சென்னை 208-வது இடத்தை பிடித்துள்ளது. 208-வது பிடித்துள்ளதால் சென்னை உலகின் பாதுகாப்பான நகரமாக பார்க்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.