ஜப்பானில் 119 வயது மூதாட்டி மரணம் - இவர்தான் உலகின் மிகவும் வயதான நபர்
உலகின் மிகவும் வயதான நபர் ஜப்பானில் காலமானதாக அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ள தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானின் புகுவோகா நகரைச் சேர்ந்த கேன் தனகா என்ற மூதாட்டி உலகிலேயே மிகவும் வயதானவர் என்ற பெருமை பெற்றவர். இவர் கடந்த ஏப்ரல் 19 ஆம் தேதி தனது 119 வது வயதில் காலமானார் . 1903ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி பிறந்த கேன் டனாகா கடந்த 2019 ஆம் ஆண்டு மார்ச் மாதம் தனது 116வது வயதில் மிகவும் வயதான நபர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம்பெற்றார்.
கடந்த 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் 117 வயது மற்றும் 261 நாட்களை எட்டியபோது ஜப்பானில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மிக வயதான நபராகவும் அறியப்பட்டார். தனது 19 வயதில் திருமணம் செய்து கொண்ட கேனின் கணவர் ஹிடியோவும் அவர்களது மூத்த மகனும் 1937 ஆம் ஆண்டு 2வது சீன-ஜப்பானியப் போரில் சண்டையிடச் சென்றபோது நூடுல்ஸ் கடையை நடத்தினார்.போருக்குப் பிறகு இந்த தம்பதியினர் அரிசி கேக் கடையை நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சோடா மற்றும் சாக்லேட் உள்ளிட்ட ருசியான உணவுகளை உண்பதுடன் புதிய விஷயங்களை கற்றுக்கொள்வது தனது ஆயுளை நீட்டித்ததாக தனகா ஒரு பேட்டியின் போது குறிப்பிட்டிருந்தார். இதனிடையே கேன் தனகா காலமான நிலையில் ரெஞ்சுப் பெண்மணியான லூசில் ராண்டன் 118 ஆண்டு மற்றும் 73 நாட்களோடு உலகின் மிக வயதான நபராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.