கனடாவில் முக்கிய பதவியில் இலங்கை தமிழர் - பணியமர்த்தி கவுரவித்த ஜஸ்டின் ட்ரூடோ

world-position-sri-lankan-tamil
By Nandhini Dec 05, 2021 07:39 AM GMT
Nandhini

Nandhini

in உலகம்
Report

கனடாவில் நாடாளுமன்ற உறுப்பினராக உள்ள இலங்கை தமிழர் கேரி ஆனந்தசங்கரிக்கு புதிய பொறுப்பை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வழங்கி இருக்கிறார்.

2 மாதங்களுக்கு முன்னர் நடந்த கனேடிய பொது தேர்தலில் லிபரல் கட்சி சார்பில் போட்டியிட்ட இலங்கை தமிழரான கேரி ஆனந்தசங்கரி பெரிய வெற்றியை பெற்று நாடாளுமன்ற உறுப்பினராகி இருக்கிறார்.

இந்நிலையில், கேரி ஆனந்தசங்கரிக்கு மேலும் ஒரு முக்கிய பொறுப்பை பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ வழங்கி இருக்கிறார். இதனையடுத்து, நீதித்துறை அமைச்சர் மற்றும் தலைமை சட்டத்தரணிக்கு நாடாளுமன்ற செயலாளராக கேரி ஆனந்தசங்கரி நியமிக்கப்பட்டிருக்கிறார்.

இந்த வாய்ப்பை வழங்கிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு அவர் நன்றி தெரிவித்திருக்கிறார்.    

கனடாவில் முக்கிய பதவியில் இலங்கை தமிழர் - பணியமர்த்தி கவுரவித்த ஜஸ்டின் ட்ரூடோ | World Position Sri Lankan Tamil