அமெரிக்காவில் மீட்கப்பட்ட 157 இந்திய புராதன சின்னங்களுடன் நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி!

world-india
By Nandhini Sep 26, 2021 04:53 AM GMT
Report

அமெரிக்காவில் மீட்கப்பட்ட 150க்கும் மேற்பட்ட இந்திய புராதன சின்னங்கள் பிரதமர் மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. பழங்கால சிலைகளை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பும் அமெரிக்காவிற்கு மோடி பாராட்டு தெரிவித்திருக்கிறார்.

திருட்டு, சட்டவிரோத வர்த்தகம், கலாசார பொருட்களின் கடத்தல் ஆகியவற்றுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துவது என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் உறுதி ஏற்றார்கள். அதன்படி, இந்தியாவிலிருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்கு கடத்தி வந்த கலைநயமிக்க 157 வகையான புராதனப் பொருட்கள் மீட்கப்பட்டு, பிரதமர் நரேந்திர மோடியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

இன்று காலை நாடு திரும்பும் பிரதமர் அந்தப் பொருட்களை விமானத்தில் கொண்டு வருகிறார். பிரதமர் மீட்டுக் கொண்டுவரும் கலைப் பொருட்களில் பாதி கலாசாரம் சம்பந்தப்பட்டவையாகும். எஞ்சிய பாதி இந்து மதம், பௌத்த மதம் மற்றும் சமண மதம் தொடர்பான சிலைகளாகும். இதில் லட்சுமி நாராயணன், புத்தர், விஷ்ணு, சிவன் பார்வதி உள்ளிட்ட சிலைகள் அடங்கியுள்ளன. 

அமெரிக்காவில் மீட்கப்பட்ட 157 இந்திய புராதன சின்னங்களுடன் நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி! | World India

அமெரிக்காவில் மீட்கப்பட்ட 157 இந்திய புராதன சின்னங்களுடன் நாடு திரும்புகிறார் பிரதமர் மோடி! | World India