குழந்தைகள் கண் எதிரே ஒரு நொடியில் 262 அடி மலை உச்சியிலிருந்து விழுந்து உயிரிழந்த பெண்!
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில், பாறை மீது நின்று கொண்டு செல்போன் மூலம் புகைப்படம் எடுக்கும்போது, குழந்தையின் கண் முன்னே 262 அடி மலை உச்சியிலிருந்து பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக ஒரு பெண் உயிரிழந்துள்ளார்.
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் கிராம்பியன்ஸ் தேசிய பூங்கா உள்ளது. லூம்பா அந்த குன்றில் மீது வைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு தடைகள் மற்றும் எச்சரிக்கை அறிகுறி மீறி, புகைப்படம் எடுப்பதற்காக பாறை மீது கடந்து சென்றுள்ளார்.
பாறை உச்சிக்கு சென்ற லூம்பா, நின்று கொண்டு புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார். அப்போது, அவர் கணவர் மற்றும் குழந்தையின் கண்முன்னே பாறையிலிருந்து கால் தவறி பள்ளத்தில் வேகமாக விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.