பூமியை நோக்கி நகரும் சிறுகோள் - நகர்வில் சின்ன மாற்றம் என்றாலும் பூமிக்கு பேராபத்து - நாசா எச்சரிக்கை
எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 2.5 மடங்கு உயரமுள்ள அந்த சிறுகோள் (asteroid) இந்த மாதம் பூமியை கடக்க இருப்பதாக நாசா தகவல் தெரிவித்திருக்கிறது.
உலகம் முழுவதிலும் உள்ள விஞ்ஞானிகள் மனிதகுலம் இந்த பூமியில் ஆபத்தின்றி உயிர்வாழ்வதை உறுதி செய்யும் முயற்சியிலும், பிரபஞ்சத்தின் ரகசியங்களை அவிழ்க்கும் முயற்சியிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறார்கள்.
இருந்தாலும், பிரபஞ்சத்தில் இருக்கும் பல பொருட்களால் பூமிக்கு பல ஆபத்துகள் வர இருக்கின்றன. மேலும், asteroids என்று குறிப்பிடப்படும் சிறுகோள்கள் நாம் வாழ்ந்து வரும் பூமியை அழிக்கும் சக்தியை கொண்டிருப்பதால் அவை மிகவும் அழிவுகரமானவை என்று பார்க்கப்படுகின்றது.
நாசாவின் சமீபத்திய தகவலின் படி, பெரிய அளவிலான ஒரு சிறுகோள் வரும் ஜனவரி 18ம் தேதி அன்று பூமியை நோக்கி வரும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனிடையே எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தை விட 2.5 மடங்கு உயரமுள்ள அந்த சிறுகோள் இந்த மாதம் பூமியை கடக்க இருப்பதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது.
இது குறித்து Earthsky.org-ன் அறிக்கை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில்-
இந்த சிறுகோள் அதன் அளவு (சுமார் 3,280 அடி) காரணமாகவும், பூமிக்கு மிகவும் நெருக்கமான தொலைவில் கடந்து செல்லும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது அபாயகரமான சிறுகோள். எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் உயரத்தை விட 2 மடங்கு பெரியதாக இருக்கும்.
இந்த சிறுகோளின் தற்போதைய நகர்வில் ஒரு சிறிய மாற்றம் நிகழ்ந்தால் கூட அது பூமியில் மோதுவதற்கு வாய்ப்பு உள்ளது.
சிறுகோள்கள் என்பவை வால் நட்சத்திரங்கள், விண்கற்கள் மற்றும் விண்வெளியில் உள்ள பெரிய பாறைகளாகும்.
இவை சூரியனை சுற்றி வருகின்றன. கிரகங்களின் ஈர்ப்பு விசையால் அவ்வப்போது அவற்றின் சுற்றுப்பாதைகள் மாறிவிடும்.
இந்த விண்வெளிப் பாறைகள் ஏதேனும் ஒரு கிரகத்துடன் மோதும் போது அது பேரழிவாகிவிடும். அதனால்தான், 150 மீட்டருக்கும் அதிகமான விட்டம் கொண்ட ஒரு சிறுகோள் பூமியை நெருங்கினாலும், நாசா அதை அபாயகரமான சிறுகோள் என்று கூறுகிறது.
அதை உன்னிப்பாகக் கண்காணித்து வருகிறது. இருந்தாலும், (7482) 1994 PC1 என பெயரிடப்பட்ட இந்த சிறுகோள் நம் கிரகத்தை பாதுகாப்பாக கடந்து செல்லும். பயப்பட தேவை இல்லை என்று விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.
தற்போது அபாயகரமானது என்று வகைப்படுத்தப்பட்டு உள்ள இந்த சிறுகோள் ஆஸ்திரேலியாவில் உள்ள சைடிங் ஸ்பிரிங் ஆய்வகத்தில் (Siding Spring Observatory) கடந்த ஆகஸ்ட் 9, 1994 அன்று ராபர்ட் மெக்நாட் என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
EarthSky-யின் கூற்றுப்படி இந்த சிறுகோள் பூமிக்கு மிக அருகில் வரும் நேரம் ஜனவரி 18, 2022 அன்று மாலை 4:51 மணிக்கு EST (21:51 UTC) அதாவது இந்திய நேரப்படி ஜனவரி 19 காலை 3.21 மணிக்கு நிகழும். இந்த சிறுகோள் பூமியுடன் ஒப்பிடும் போது மணிக்கு 43,754 மைல்கள் (வினாடிக்கு 19.56 கிலோமீட்டர்) வேகத்தில் நகர்கிறது.
பூமியிலிருந்து 1.2 மில்லியன் மைல்கள் (1.93 மில்லியன் கிமீ) அல்லது பூமி-சந்திரன் தூரத்தை விட 5.15 மடங்கு தூரத்தில் கடந்து செல்லும். இந்த தொலைவு பாதுகாப்பானது என்றாலும் கூட தொலைநோக்கி மூலம் கவனிப்பது சற்று கடினம் என கூறப்படுகிறது.
விரைவில் பூமியை கடக்க உள்ள சிறுகோள் (7482) 1994 PC1 தவிர வேறு பல சிறுகோள்களும் ஜனவரி மாதத்தில் பூமியை கடக்க வாய்ப்புள்ளது. 5 சிறுகோள்கள் பூமியை நோக்கி வரவுள்ளதாகவும் நாசா தெரிவித்திருக்கிறது.