டிசம்பர் 18.. FIFA World Cup .. 36 வருஷ கனவு : கோப்பையை வெல்லுமா அர்ஜென்டினா ?
FIFA கால்பந்து உலகக்கோப்பை போட்டியில் மொராக்கோவை வீழ்த்தி இறுதி போட்டிக்கு முன்னேறியது பிரான்ஸ் அணி.
FIFA கால்பந்து உலகக்கோப்பை
22-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா கத்தாரில் நடந்து வருகிறது. இதில் நள்ளிரவு அல்பேத் ஸ்டேடியத்தில் நடந்த 2-வது அரைஇறுதியில் பிரான்ஸ் அணி, மொராக்கோவை எதிர்கொண்டது.
ஆட்டத்தின் 79-வது நிமிடத்தில் பிரான்ஸ் அணி வீரர் ராண்டல் கோலோ முஆனி தனது அணிக்கான இரண்டாவது கோலை அடித்து அணியின் வெற்றி வாய்ப்பை பிரகாசமாக்கினார்.
மொரோக்கோ வெளியேற்றம்
தொடர்ந்து நடைபெற்ற ஆட்டத்தில் மொராக்கோ அணியினர் எவ்வளவோ போராடியும் கோல் அடிக்கும் வாய்ப்பை இழந்தனர். பின்னர் கொடுக்கப்பட்ட கூடுதல் நேரத்திலும் மேற்கொண்டும் கோல் எதுவும் அடிக்காததால் பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் மொரோக்கோ அணி வெளியேற்றியது.
2-0 என்ற கோல் கணக்கில் மொராக்கோவை வீழ்த்தி தொடர்ந்து 2வது முறையாக உலகக்கோப்பை இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது பிர என்பது குறிப்பிடதக்கது.
இந்த நிலையில் வரும் டிசம்பர் 18ம் தேதி, பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா அணிகளுக்கு இடையே இறுதிப் போட்டி நடைபெற உள்ளது. 36 ஆண்டுகளுக்கு பிறகு அர்ஜெண்டினா மீண்டும் கோப்பையினை வெல்லுமா ? என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.