வாழைப்படம் சாப்பிட்ட 2 வயது குழந்தை பலி
வாழைப்பழ துண்டை சாப்பிட்ட 2 வயது குழந்தை மூச்சுத்திணறி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
பிரித்தானியாவின் வேல்ஸில் டிலான் ஜான் ஜேம்ஸ் கிரேக் என்ற 2 வயது குழந்தைக்கு அவன் தாயார் டேனியல் பட்டர்லி (30) வாழைப்பழ துண்டை கொடுத்துள்ளார். 30 வினாடிகள் பிறகு வீட்டின் பக்கத்து அறைக்கு சென்று விட்ட டேனியல் பட்டர்லி அதிர்ச்சி அடைந்தார்.
குழந்தை சாப்பிட்ட வாழைப்பழ துண்டு தொண்டையில் சிக்கிய நிலையில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவதிப்பட்டு கொண்டிருந்தது.
இதைப் பார்த்ததும் உடனடியாக 999 அவசர உதவி எண்ணுக்கு அழைத்துள்ளார் பட்டர்லி. இதனையடுத்து, மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. இந்த சம்பவம் கடந்த ஜூலை மாதம் நடந்தது.
இது குறித்த விசாரணை தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில் முடிவுக்கு வந்துள்ளது. இது தொடர்பாக டேனியல் கொடுத்த வாக்குமூலத்தில், குழந்தையின் நிலையை பார்த்த போது ஏதோ தவறு நடந்திருப்பதாக உணர்ந்தேன்.
அவன் மூச்சுத்திணறுவதை பார்த்தேன். அவசர உதவி குழுவினர் வருவதற்கு முன்னர் குழந்தைக்கு எப்படி உதவுவது என ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டு ஊழியர்கள் மூலம் எனக்கு ஆலோசனை வழங்கப்பட்டது.
அப்போது என் மகனின் தொண்டையில் வாழைப்பழ துண்டு சிக்கியிருப்பதை கண்டேன். பின்னர் மருத்துவமனைக்கு குழந்தை கொண்டு செல்லப்பட்டது. ஆனால், என் குழந்தையை காப்பாற்ற முடியவில்லை என கூறினார்.