ஆப்கானிஸ்தானை உலுக்கிய சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - மக்கள் அலறி ஓட்டம் - 26 பேர் உயிரிழப்பு
ஆப்கானிஸ்தானில் அடுத்தடுத்து ஏற்பட்ட 2 நிலநடுக்கத்தால், சுமார் 26 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் படுகாயம் அடைந்துள்ளனர்.
தெற்கு ஆசிய நாடான, ஆப்கானிஸ்தான் நாட்டின் மேற்கில் உள்ள பக்திஸ் மாகாணத்தில், நேற்று பிற்பகல் 2 மணிக்கு சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில், 5.3 ஆக பதிவாகியது.
இதனையடுத்து, துர்க்மெனிஸ்தான் என்ற பகுதியில் மாலை 4 மணியளவில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 4.9 ஆக பாதிவாகியது.
அடுத்தடுத்து நிகழ்ந்த இந்த 2 நிலநடுக்கங்களால் குடியிருப்புக் கட்டடங்கள், வீடுகளின் மேற்கூரைகள் இடிந்து விழுந்தன. நிலநடுக்கம் உணரப்பட்டதை அடுத்து மக்கள் அலறி அடித்துக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளுக்கு ஓடினார்கள்.
இந்த 2 சக்தி வாய்ந்த நிலநடுக்கங்களால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி 4 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 26 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
தொடர்ந்து இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி நடந்து வருகிறது. பலரது நிலை கவலைக்கிடமாக இருப்பதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என்று தகவல் வெளியாகி உள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலைக் கலவரத்தின் முக்கிய சந்தேக நபரான சுரேஷ் படுகாயம் : வெளியான பின்னணி IBC Tamil