சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மேலும் 4 விண்வெளி வீரர்கள் பயணம்

world
By Nandhini Nov 19, 2021 09:09 AM GMT
Report

ஸ்பேஸ்எக்ஸ் மற்றும் நாசா, சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மேலும் 4 விண்வெளி வீரர்களை அனுப்பி உள்ளது.

ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனம் மற்றும் நாசா ஆகிய நிறுவனங்கள் ஒன்றிணைத்து புளோரிடா மாகாணத்தில் உள்ள விண்வெளி மையத்திலிருந்து புதன் கிழமையன்று இரவு 3:03 மணியளவில் 4 விண்வெளி வீரர்கள் கொண்ட ரக்கட்டை விண்வெளி சுற்றுப்பாதையில் செலுத்தியது.

இந்த பயணத்தில், இந்திய, அமெரிக்கா விண்வெளி வீரர் ராஜா சாரி அவர்கள் மிஷனின் தளபதியாக பணியாற்றுவார் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த களமானது 22 மணிநேரம் பயணத்தின் பின் சர்வதேச விண்வெளி நிலையத்துடன் இணையும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுப்பாதையில் செல்லும் விண்வெளி ஆய்வகத்தில் இந்த குழுவினர் ஆய்வக சோதனை மற்றும் பராமரிப்பு மேன்படுத்துதல் போன்ற பணிகளில் சுமார் 6 மாத காலம் செலவிடுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு மேலும் 4 விண்வெளி வீரர்கள் பயணம் | World