கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக தமிழ் பெண் நியமனம்
அண்மையில் கனடாவில் பொது தேர்தல் நடைபெற்றது. இந்த பொதுத் தேர்தலில் ஜஸ்டின் ட்ரூடோ ஆட்சியை 3வது முறையாக கைப்பற்றினார்.
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ தனது அமைச்சரவை வரிசையில் ஒரு பெரிய மாற்றத்துடன் தொடர்ந்து முன்னெடுத்து நடத்தி வருகிறார். இதனையடுத்து, இன்று கனடாவில் புதிய அமைச்சரவை நியமிக்கப்பட்டிருக்கிறது.
புதிய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புது முகங்கள் பலருக்கும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.
இதன்பபடி அமைச்சரவையில் 9 புதியவர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்நிலையில், சில முக்கிய மாற்றங்கள் மற்றும் அடுத்த மாதம் நாடாளுமன்றம் திரும்புவதற்கு முன்னதாக புதிய இலாகாக்கள் உருவாக்கம் ஆகியவை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
புதிய அமைச்சரவை பட்டியலில் ட்ரூடோ உட்பட 39 அமைச்சர்கள் இடம்பெற்றிருக்கிறார்கள். இது கடந்த பட்டியலைவிட சற்று பெரியது என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. கனடாவின் புதிய பாதுகாப்பு அமைச்சராக அனிதா ஆனந்த் என்பவர் நியமிக்கப்பட்டிருக்கிறார்.
1990ம் ஆண்டுகளில் முன்னாள் பிரதம மந்திரி கிம் காம்ப்பெல்க்குப் பிறகு, கனடாவின் வரலாற்றில் பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பேற்ற 2வது தமிழ் பெண் அனிதா ஆனந்த் என்பதும் குறிப்பிடத்தக்கது. அனிதா ஆனந்த் டொரன்டோ பல்கலைக்கழகத்தில் சட்டப் பேராசிரியாக பணியாற்றினார்.
கனடாவின் நோவா ஸ்கோடியா மாகாணத்தில் உள்ள கென்ட்வில் நகரில் பிறந்தவர். தமிழகம் - வேலூரைத் தனது பூர்வீகமாகக் கொண்ட அனிதா ஆனந்த்தின் தந்தை ஒரு வைத்தியர். இவரது இயற்பெயர் சுந்தரம் விவேகானந்தன். அனிதாவின் தாயார் சரோஜ் ராம், பஞ்சாப் அமிர்தரஸைச் சேர்ந்தவர்.
