75 ஆண்டுகளுக்கு பின்பு காதலியை சந்தித்த காதலன் - படிக்கும் நம் மனதை ஒரு நிமிடம் நெகிழச் செய்யும் உண்மைக் கதை!
நம்ம ஆளுங்களுக்கு தன் காதலியை ஒரு வாரத்திற்கு பார்க்காவிட்டாலே என்னவோ.... தலையே வெடித்து விடும்போல் இருப்பார்கள். ஆனால் ஒருவர் தனது 97வது வயதில் கிட்டத்தட்ட 75 ஆண்டுகள் கழித்து தனது காதலியைச் சந்தித்துள்ளார்.
அமெரிக்க நாட்டை சேர்ந்தவர் ராபின்ஸ். தற்போது இவருக்கு 97 வயதாகிறது. இவர் ஒரு ராணுவவீரர். அண்மையில் பிரான்ஸில் நடந்த 75-வது கொடி நாள் விழாவில் கலந்து கொண்டார். அப்போது ஊடகவியாளர்களிடம் பழைய நிகழ்வுகளை பற்றி பேசினார் ராபின்ஸ்.
அப்போது அவர் பேசுகையில், ‘1944ல் நான் இங்கு வந்திருக்கிறேன். அப்போது என் ஆடைகளை சலவை செய்ய ஒரு ஆள் தேடினேன். அப்போது ஒரு பெண் அதற்கு சம்மதித்தார். அப்போது, அப்பெண்ணின் மகள் ஜென்னீன் பிசர்சன் மீது எனக்கு காதல் வந்தது.
இருவரும் காதலித்தோம். இரண்டு மாதங்களில் நாங்கள் அந்த பகுதியில் இருந்து வெளியேற வேண்டிய சூழல் ஏற்பட்டது. மீண்டும் வந்து உன்னை கூட்டிட்டு போகிறேன் என்று அவளிடம் நான் சொன்னேன். அவளோ என்னிடம் அழுதாள்... என்னை பிரிய மனமில்லாமல் அழுது கொண்டே இருந்தாள். போர் முடிந்தது.
ஆனால் உடனே அமெரிக்கா செல்ல வேண்டி இருந்ததால் என்னால் அங்கு செல்ல முடியவில்லை. அவளது படம் மட்டும் இன்னும் என்னிடம் பத்திரமாக உள்ளது. அவளை கண்டுபிடிக்க உதவமுடியுமா என கேட்டார்.
உடனே பத்திரிகையாளர்கள், முதன் முதலாக அவர்கள் சந்தித்த இடத்திலிருந்து 27 கிலோ மீட்டர் தொலைவில் ஒரு கிராமத்தில் அவரது காதலி உயிருடன் இருப்பதைக் கண்டுபிடித்தனர்,
அங்குச் சென்று காதலியை சந்தித்தார் ராபின்ஸ்... காதலியை கட்டி அணைத்து முத்தமிட்டார்... காதலிக்காக தான் பாதுகாத்து வைத்திருந்த அவரிடம் சர்ப்ரைஸ் கிப்டாக கொடுத்திருக்கிறார். அப்போது காதலி.. அமெரிக்காவுக்கு போன நீங்கள்... ஏன் என்னைப் பார்க்கவரவில்லை? போர் முடிந்தபோதும் கூட நீங்கள் இங்கேயே தங்கிவிட வேண்டும் என கடவுளிடம் மன்றாடினேன் என தழுதழுத்த குரலில் கூறினார்.
அதற்கு ராபின்ஸ்... அமெரிக்க சென்றபோது எனக்கு திருமணம் செய்து வைத்துவிட்டனர். இதனால், என்னால், திரும்ப வர முடியவில்லை என்றார். இருவருமே இப்போது வாழ்க்கைத் துணைகள் இழந்து வாழ்ந்து வருகின்றனர்.
காதலர்கள் இருவரும் அங்கிருந்து பிரியும் போது, இருவர் கண்களிலிருந்தும் தாரை, தாரையாக கண்ணீர் கொட்டியது.
இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை அங்கிருந்தவர்கள் பார்த்தபோது, அவர்கள் நெஞ்சை ஒரு நிமிடத்தில் கனத்துவிட்டார்கள்.