பெண்கள் மட்டும் நிர்வாணமாக சுற்றித்திரியும் அபூர்வ வனப்பகுதி! சுவாரஸ்யச் செய்தி!
இந்தோனேசியாவில் உள்ள பப்புவா என்ற ஒரு வனப்பகுதியில் காலாகாலமாக பெண்கள் மட்டுமே வாழ்ந்து வருகிறார்கள். இந்த வனப்பகுதிக்குள் ஆண்கள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது. அத்துமீறி யாராவது நுழைந்தால், உள்ளூர் மதிப்பில் ஒரு மில்லியன் ரூபியா (50 பவுண்டுகள்) அபராதமாக வசூலிக்கப்படுமாம்.
பப்புவா வனப்பகுதிக்குள் நுழைய பெண்களுக்கும் கட்டுப்பாடுகள் உள்ளது. இங்கு செல்லும் பெண்கள் கண்டிப்பாக ஆடைகள் இல்லால் பிறந்த மேனியாகத்தான் நுழைய வேண்டுமாம். பெரும்பாலும், இந்த வனப்பகுதியில் கிளிஞ்சல்கள் சேகரிக்கவும், கதைகள் பேசவுமே பெண்கள் செல்வதாக அங்கு குடியிருக்கும் பெண்கள் கூறுகின்றனர்.
மேலும், வனப்பகுதிக்குள் படகில் செல்லும் அப்பகுதி கிராம பெண்கள், குறிப்பிட்ட எல்லையை கடந்த பின்னர், ஆண்கள் தொல்லை இல்லாமல், விரும்பியபடி வாழலாம் என தெரிவித்திருக்கிறார்கள். சேகரித்த கிளிஞ்சல்களை வனப்பகுதிக்கு அருகாமையில் உள்ள சந்தையில் விற்பனை செய்கின்றனர்.