கடலில் உயிருக்கு போராடிய இலங்கை பெண் - சற்றும் யோசிக்காமல் உதவி செய்த பாகிஸ்தானியர்!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடலில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த இலங்கைப் பெண்ணை காப்பாற்றிய பாகிஸ்தானியரை சமூகவலைத்தளத்தில் பலர் பாராட்டி வருகிறார்கள்.
ஐக்கியர அரபு அமீரகத்தின் சுற்றுலாப்பயணிகள் அதிகம் வந்து செல்வார்கள். அப்போது, Ajman Marina கடற்கரையில், Mohammad Nagman என்பவர் கடந்த ஞாயிற்றுக் கிழமை நடந்து சென்று கொண்டிருந்தார்.
அப்போது, கடற்கரைக்கு உள்ளே, பெண் ஒருவரின் குரல் கேட்டது. கடற்கரையில் அவர் காப்பாற்றும் படி கத்தி கூச்சலிட்டார். இதைக் கேட்ட, அவர் சற்றும் யோசிக்காமல் உடனடியாக கடலில் குதித்து, அவரை கடலிலிருந்து வெளியே இழுத்து வந்தார்.
அதன் பின், அந்த பெண்ணுக்கு முதலுதவி கொடுத்து உயிரை காப்பாற்றினார். இது குறித்து வெளிநாட்டு சிவில் பாதுகாப்புத்துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. உடனடியாக அங்கு விரைந்து வந்த அவர்கள் அவரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இது குறித்து காவல்நிலைய அதிகாரி Ghaith Khalifa Salem Al Kaab கூறுகையில், தக்க நேரத்தில் அப்பெண்ணின் உயிரைக் காப்பாற்றிய அவரின் செயல் மிகவும் பாராட்டுக்குரியது. அவரின் வீரச் செயலைநான் பாராட்டுகிறேன் என்றார்.
காப்பாற்றப்பட்ட அப்பெண் இலங்கையைச் சேர்ந்தவர். மேலும், அந்த பெண் குறித்த எந்த ஒரு தகவலும் வெளியாகவில்லை. துணிச்சலாக அப்பெண்ணை காப்பாற்றிய Mohammad Nagman செயலை சமூகவலைத்தளத்தில் பலர் பாராட்டி வருகின்றனர். தற்போது சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
