ரூ.7.80 லட்சத்திற்கு விற்கப்பட்ட அரியவகை மீன்! அப்படி என்ன இந்த மீனில் ஸ்பெஷல் இருக்கு?

world
By Nandhini Jun 09, 2021 09:08 AM GMT
Report

பாகிஸ்தானில் குவாதர் மாவட்டத்தில் உள்ள மீனவர்கள் சிலர் குரோக்கர் என்ற அரியவகை மீனை பிடித்தனர். அதில் ஒரு மீன் ரூ. 7.80 லட்சத்திற்கு விற்பனையானது தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

சுமார் 26 கிலோ எடை கொண்ட இந்த மீன் சுமார் ரூ 7.80 லட்சத்திற்கு பாகிஸ்தானின் பலுசிஸ்தான் பகுதியில் விற்பனையாகியுள்ளது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பும் இதே ரக மீன் சுமார் 17 லட்சத்திற்கு விற்பனையானது குறிப்பிடத்தக்கது.

பொதுவாக இந்த ரக மீன்கள் சீனா – கொரியாவிற்கு இடைபட்ட கடற்பகுதியான சவுத் எல்லோ கடல் பகுதியில் அதிகமாக காணப்படுமாம். இந்த மீன்கள் கடலுக்கு அடி ஆழத்தில் வாழுமாம்.

அதனால், இந்த வகை மீன்களை பிடிப்பது மிகவும் சிரமம். மிகப்பெரிய சவாலான விஷயமாகவும் கருதப்படுகிறது. இந்த மீன்கள் கருவுறும் காலம் (2 மாதம்) தான் கடலின் மையப்பகுதிக்கு வருமாம்.

அதனால், ஆண்டிற்கு 2 மாதம் மட்டும்தான் இந்த மீன்களை பிடிக்க வாய்ப்பு கிடைக்கும். 1970களில் சீனாவில் சுமார் 2 லட்சம் குரோக்கர் ரக மீன்கள் பிடித்து உலகம் முழுவதும் விற்பனை செய்யப்பட்டது.

அதன் பிறகு கடலில் குரோக்கர் ரக மீன்களின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டது என்று சர்வதேச இயற்கை பாதுகாப்பு மையம் இந்த மீனை சிவப்பு பட்டியலில் சேர்த்தது.

ரூ.7.80 லட்சத்திற்கு விற்கப்பட்ட அரியவகை மீன்! அப்படி என்ன இந்த மீனில் ஸ்பெஷல் இருக்கு? | World

ஏன் இந்த மீன் இவ்வளவு விலைக்கு விற்பனையாகுகிறது? அப்படி என்ன அந்த மீனில் ஸ்பெஷல் உள்ளது என்பதைப் பற்றி பார்ப்போம் -

இந்த குரோக்கர் ரக மீன்கள் அதிகமான மருத்துவ குணங்கள் கொண்டது. இந்த மீனில் காணப்படும் ஏர் பிளாடர் என்ற பகுதி அறுவை சிகிச்சை முடிந்ததும் தையல் போடப்படும் போது பயன்படுமாம்.

இதை பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்தால் பக்கவிளைவுகள் இல்லாமல் காயம் குணமாகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, இதயம் தொடர்பான அறுவை சிகிச்சையின்போது பயன்படுத்தினால் காயம் வெகு சுலமாக ஆறுவது மட்டுமில்லாமல் பக்கவிளைவுகள் இல்லாமல் இருக்கலாம்.

மேலும் கேன்சர் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு இந்த மீன் மிகப்பெரிய மருந்தாக உள்ளது. இந்த மீனால் மனிதனின் வாழ்நாள் அதிகரிக்கும் குணம் இருக்கிறது என்று மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.