வளர்ச்சியடைந்த இந்தியாவை உருவாக்கும் உறுதியுடன் நுழைவோம்...மோடி
பழைய நாடாளுமன்றம் இன்றுடன் விடைபெற்ற நிலையில், அதன் மைய மண்டபத்தில் இந்திய பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார்.
மோடி உரை
இன்று புதிய நாடாளுமன்றத்தில் அலுவல் பணிகள் துவங்கப்படவுள்ள நிலையில், பழைய நாடாளுமன்ற மைய மண்டபத்தில் பிரதமர் மோடி சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், இதே அவையில் இந்தியாவின் 86 முறை குடியரசு தலைவர்கள் உரையாற்றியுள்ளனர் என குறிப்பிட்டார்.
மேலும், திருநங்கைகளுக்கு நீதி வழக்கும் சட்டங்கள் இந்த நாடளுமன்றத்தில் தான் நிறைவேற்றப்பட்டது என்றும் இந்தியா இன்று உலக பொருளாதாரத்தில் ஐந்தாவது மிக பெரிய நாடாக உள்ளது என எடுத்துரைத்தார்.
அரசியல் சாசன சட்டப்பிரிவு 370-ஐ நீக்குவதற்கான வாய்ப்பு இந்த நாடாளுமன்றத்தில் தான் இயற்றப்பட்டது என சுட்டிக்காட்டிய மோடி, அதன் காரணமாக தற்போது அங்கு அமைதி நிலவுகிறது என்றும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், இந்திய சுயசார்பு நாடாக மாறவேண்டும் என்றும் உற்பத்தி துறையில் நாம் தற்போது மிக பெரிய இடத்தை அடையவேண்டும் என்றும்,அதன் மூலம் சூழலுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்பட கூடாது என தெரிவித்தார்.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும்
உலகத்திற்க்கு உள்ள பொது தரக்கட்டுப்பாட்டில் நாம் பொருட்களை விநியோகம் செய்தால் தான் உலகெங்கும் இந்தியாவின் கொடி பறக்கும் என குறிப்பிட்டு, தற்போதிருக்கும் இளைஞர் சக்தியை அப்படியே பாதுகாத்திட வேண்டும் என்றும் கூறினார்.
வளர்ச்சி அடைந்த இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற உறுதியுடன் புதிய நாடாளுமன்றத்திற்குள் நாம் நுழைய வேண்டும் என்று கூறினார். பிரதமர் மோடியின் உரை முடிவடைந்த நிலையில், நாட்டின் அனைத்து எம்.பி'க்களும் புதிய நாடாளுமன்றம் செல்ல, அங்கு தற்போது அலுவல் பணிகள் துவங்கியுள்ளது. புதிய நாடாளுமன்ற வளாகத்தில் இன்றே மகளிருக்கான 33% இடஒதுக்கீடிற்கான மசோதா தாக்கல் செய்யப்படவுள்ளது.