அண்ணாமலை கையில் கொடுத்த மனு குப்பையில் கிடந்தது - மனுதாரர் விரக்தி
பாஜக தலைவர் அண்ணாமலையிடம் கொடுத்த மனு வீதியில் விட்டு சென்றதால் பெண் விரக்தியடைந்துள்ளார்.
அண்ணாமலை நடைபயணம்
என் மண் என் மக்கள் என்ற பெயரில் தமிழக பாஜக தலைவர் அன்னமணலை தமிழகம் முழுவதும் பாதயாத்திரை மேற்கொண்டு வருகிறார். இதில், அவர் அண்மையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் நடைபயணம் மேற்கொண்டார்.
அப்போது திருப்பத்தூர் பகுதியை சேர்ந்த தாய்வீடு மகளிர் குழுவைச் சேர்ந்த ரமா என்பவர் அண்ணாமலையிடம் மகளிர் குழுக்களின் பிரச்சனைகள் குறித்து மனு ஒன்றை அண்ணாமலையிடமே அளித்திருந்தார்.
தெருவில் கிடந்தது
ஆனால் அண்ணாமலையிடம் கொடுத்த மனு சில நேரங்களிலேயே தெருவில் கிடந்ததாக மனு அளித்த பெண் ராமாவிற்கு தகவல் அளிக்கப்பட அவரை அதனை நேரில் சென்று பார்த்து உறுதிப்படுத்தியுள்ளார்.
நிச்சயமாக நடவடிக்கை எடுக்கப்படும் என அண்ணாமலை உறுதியளித்ததாக கூறிய நிலையில், மனு தெருவில் கிடந்ததை அடுத்து ரமா மிகவும் விரக்தியடைந்துள்ளார்.