சின்ன சின்ன செலவிற்கு கவலை இல்ல..ஆனந்தத்தில் திளைக்கும் பெண்கள்!!

Udhayanidhi Stalin M K Stalin Tamil nadu DMK
By Karthick Sep 15, 2023 04:46 AM GMT
Report

இன்று மகளிர் உரிமை திட்டத்தை முதல்வர் முக ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் துவங்கி வைக்கும் நிலையில், நேற்றே பணம் பெற்ற பெண்கள் சிலர் தங்களது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டுள்ளனர்.

மகளிர் உரிமை திட்டம்

திமுகவின் மிக முக்கியமான வாக்குறுதியான "கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம்" இன்று அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு காஞ்சீபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினால் தொடங்கி வைக்கின்றார். இதற்காக பெறப்பட்ட 1 கோடியே 63 லட்சம் விண்ணப்பங்களில் 1 கோடியே 6 லட்சம் பேருக்கு இந்த உரிமைத்தொகை வழங்கப்படுகிறது.

women-thanks-stalin-for-1000-rupees

நடந்து முடிந்த தமிழக பட்ஜெட்டில் இதற்காக தனியாக பட்ஜெட் ஒதுக்கி, தமிழக அரசு தற்போது இந்த சிறப்பான திட்டத்தை நிறைவேற்ற போகிறது. திமுக அரசின் மிக முக்கிய திட்டமாக பார்க்கப்படும் இதில், நேற்றைய தினமே சிலருக்கு பணம் அவர்களது பேங்க் அக்கௌன்ட்டில் போட்டுள்ளது. ம

கிழ்ச்சியை வெளிப்படுத்திய பெண்கள்

இதன் காரணமாக பலரும் தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி, தமிழக முதல்வர் முக ஸ்டாலினுக்கு தங்களது நன்றியை தெரிவித்து வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் இது குறித்து கூறும் போது, சிறு சிறு குடும்பங்களை சேர்ந்த பெண்களுக்கு இது மிக உதவியாக இருக்கும் என குறிப்பிட்டு தனது நன்றியை முதல்வருக்கு தெரிவித்து கொண்டார்.

women-thanks-stalin-for-1000-rupees

அதே போல மற்றொரு பெண், நீண்ட காலமாக தங்களது சிறு சிறு செலவுகளுக்கு கூட மற்ற பெண்களை எதிர்பார்த்து காத்திருந்த நிலை மாறி தற்போது தங்களது சிறு தேவைகளுக்கு தாங்கள் யாரையும் எதிர்பார்த்திட தேவையில்லை என மகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.