800 ரூபாய்க்கு பெண் குழந்தையை விற்ற கொடூர தாய் - பகீர் சம்பவம்!
பெண் குழந்தை 800 ரூபாய்க்கு விற்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குடும்ப வறுமை
ஓடிசா, மயூர்பஞ்ஜா மாவட்டத்தைச் சேர்ந்தவர் முசு. இவரது மனைவி கராமி முர்மு. முசு தமிழகத்தில் வேலை செய்து வரும் நிலையில், மனைவி வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர்களுக்கு இரண்டாவதாக 8 மாத பெண் குழந்தை உள்ளது.
இந்நிலையில், குடும்ப வறுமையின் காரணமாக குழந்தையை வளர்க்க முடியாது என்ற நிலையில், 800 ரூபாய்க்கு விற்றுள்ளார். தொடர்ந்து, ஊருக்கு வந்த கணவர் குழந்தையை குறித்து மனைவியிடம் கேட்டுள்ளார்.
தாய் பகீர் செயல்
அதற்கு குழந்தை உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதில் சந்தேகமடைந்த முசு போலீஸில் புகாரளித்துள்ளார். தொடர்ந்து, விசாரணையில் குழந்தை இல்லாத தம்பதிக்கு 800 ரூபாய்க்கு குழந்தை விற்கப்பட்டது தெரியவந்துள்ளது.
அதனையடுத்து, குழந்தையின் தாய் கராமி முர்மு, குழந்தையை வாங்கிய தம்பதி மற்றும் அதற்கு ஏற்பாடு செய்த இடைத்தரகர் ஆகிய 4 பேரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.