ஓடும் ரயிலில் கதறிய இளம்பெண்; 40 கிமீ தொலைவில் 3 முறை.. - கொடூர சம்பவம்!

Sexual harassment India Crime Madhya Pradesh
By Jiyath Dec 13, 2023 05:08 AM GMT
Report

ஓடும் ரயிலில் பெண் ஒருவர் பாலியல், வன்கொடுமை செய்யப்பட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

பாலியல் வன்கொடுமை      

மத்தியப் பிரதேச மாநிலம் பகாரியா ரயில் நிலையத்தில் 30 வயது பெண் ஒருவர் கழிவறை செல்வதற்காக தனது ரயிலிலிருந்து இறங்கி எதிரே நின்ற மற்றொரு ஏசி ரயிலில் ஏறியுள்ளார்.

ஓடும் ரயிலில் கதறிய இளம்பெண்; 40 கிமீ தொலைவில் 3 முறை.. - கொடூர சம்பவம்! | Women Raped In A Moving Train Madhya Pradesh

இதனைக் கவனித்த கமலேஷ் குஷ்வாகா (22) என்பவர் அந்த பெண்ணுக்கு தெரியாமல் பின் தொடர்ந்து சென்றுள்ளார். பின்னர் அந்த பெண்ணை பலமாக இழுத்துத் தள்ளி கதவைப் பூட்டியுள்ளார்.

இதில் அந்த பெண்ணுக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த ரயிலும் புறப்படத் தொடங்கியுள்ளது. இதனையடுத்து கமலேஷ் குஷ்வாகா என்பவர், 40 கிலோ மீட்டர் தொலைவிற்குள் அந்த பெண்ணை 3 முறை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.

குற்றவாளி கைது

பின்னர் சாத்னா ரயில் நிலையத்திற்குள் ரயில் வந்ததும், காமலேஷிடம் இருந்து அந்த பெண் போராடித் தப்பித்து அரைகுறை ஆடையுடன் ஓடியுள்ளார். பின்னர் தனக்கு நேர்ந்த கொடுமையை ரயில் நிலையை காவலர்களிடம் விவரித்துள்ளார்.

ஓடும் ரயிலில் கதறிய இளம்பெண்; 40 கிமீ தொலைவில் 3 முறை.. - கொடூர சம்பவம்! | Women Raped In A Moving Train Madhya Pradesh

இதனால் அதிர்ச்சியடைந்த போலீசார் காமலேஷை பிடிக்க முயன்றதும், அவர் ரயிலுக்குள் எறி ஏசி கோச்சை பூட்டினார். இதனைத் தொடர்ந்து மெக்கானிக்கை வரவழைத்து கதவைத் திறந்த போலீசார் குற்றவாளியான கமலேஷை கைது செய்தனர். ஓடும் ரயிலில் பெண் ஒருவர் பாலியல், வன்கொடுமை செய்யப்பட சம்பவம் மத்தியப் பிரதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.