ஒரே குத்து தான்.. தன் பிறந்தநாளை கணவரின் இறந்தநாளாக்கிய காதல் மனைவி - வெறிச்செயல்!

Attempted Murder Death Pune
By Vinothini Nov 25, 2023 10:19 AM GMT
Report

மனைவி குத்தியதில் கணவர் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தகராறு

புனே, வானவ்டி என்ற பகுதியில் உள்ள ஆடம்பர குடியிருப்பு ஒன்றில் வசிக்கும் தொழிலதிபர் நிகில் கண்ணா 36 வயதான இவர், ரேணுகா என்ற 38 வயதான பெண்ணை கடந்த ஆறு ஆண்டுகளுக்கு முன்னர் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

women punched his husband and he dead in pune

இதில் ரேணுகா தனது பிறந்தநாளை கொண்டாட துபாய்க்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளார். பின்னர், திருமண நாள் மற்றும் பிறந்தநாளுக்கு தன்னை வெளியே அழைத்து செல்லாததால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

எல்லாம் பிரியாணிக்காக.. 55 முறை கத்தியால் தொண்டையிலேயே குத்தி கொன்ற சிறுவன் - கொடூரம்!

எல்லாம் பிரியாணிக்காக.. 55 முறை கத்தியால் தொண்டையிலேயே குத்தி கொன்ற சிறுவன் - கொடூரம்!

கொலை

இந்நிலையில், ரேணுகாவை அவரது கணவர் வெளியே எங்கும் அழைத்து செல்லவில்லை, பின்னர் எந்த விலையுயர்ந்த பொருட்களையும் வாங்கித்தரவில்லை. இதனால் கோபத்தில் இருந்த ரேணுகா நேற்று மதியம் நிகிலுடன் சண்டையிட்டுள்ளார். அப்பொழுது ஆத்திரமடைந்த ரேணுகா, நிகிலின் முகத்தில் குத்தினார்.

arrest

இதனால், நிகிலின் மூக்கு மற்றும் சில பற்கள் உடைந்தன இதனால், அதிக ரத்தப்போக்கு ஏற்பட்ட நிலையில், சமத்துவ இடத்திலேயே சுயநினைவை இழந்து விழுந்த நிகில் உயிரிழந்தார்.

சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் உடலைப் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஐபிசி 302இன் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார் மனைவி ரேணுகாவை கைது செய்துள்ளனர்.