பெண்களும் அர்ச்சகர் ஆகலாம் - அமைச்சர் சேகர்பாபு!

minister temple women sekarbabu
By Irumporai Jun 12, 2021 10:12 AM GMT
Report

அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். அனைத்து சாதியினரும் பெண்களும் அர்ச்சகராக மாறா100 நாட்களில் சட்டம்  நிறைவேற்றப்படும்.  அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கூறினார்.

சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அமைச்சர் சேகர்பாபு, அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோயில்களிலும் தமிழில் அர்ச்சனை செய்யப்படும். தமிழில் அர்ச்சனை செய்யும் அர்ச்சகர் பெயர்,  அறிவிப்பு பலகையில் இடம்பெறும் என கூறினார்.

மேலும், எந்த கோயிகளில் அர்ச்சகர் பற்றாகுறை உள்ளதோ அங்கு தேவையான அர்ச்சகர்கள் நியமிக்கப்படுவர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் 100 நாட்களில் நிறைவேற்றப்படும். என்று கூறிய அமைச்சர்.

அர்ச்சகராக விரும்பும் பெண்களுக்கும் அதற்கான பயிற்சி அளிக்கப்படும்.  என்றும் கூறினார்.