பல ஆண்டுகளாக காய்கனிகளை மட்டுமே சாப்பிட்ட பிரபலம்; பட்டினியால் பலியான சோகம் - என்ன நடந்தது!
சமைக்கப்படாத சைவ உணவுகளை மட்டும் சாப்பிட்டு வந்த பெண் திடீரென உயிரிழந்துள்ளார்.
சைவ உணவு
ரஷ்யாவைச் சேர்ந்த ஜானா சாம்சோனோவா (Zhanna Samsonova) என்ற 39 வயதான பெண் ஒருவர் கடந்த சில ஆண்டுகளாக முற்றிலும் சமைக்கப்படாத சைவ உணவுகளை மட்டுமே உட்கொண்டு வந்துள்ளார். இவர் தனது சமூக ஊடக வலைத்தளங்களில் சமைக்கப்படாத பச்சை உணவுகளை விளம்பரம் செய்து வந்தார்.
Zhanna Samsonova வேகன் எனப்படும் சைவ உணவு முறையை பின்பற்றி வந்தார். வேகன் எனப்படும் உணவை உண்பவர்கள் விலங்குகளில் இருந்து கிடைக்கும் பால், தயிர் போன்ற உணவுகளை கூட சாப்பிட மாட்டார்கள்.
குறைந்தது நான்கு ஆண்டுகளாக முற்றிலும் மூல சைவ உணவைப் பின்பற்றி வந்தார் Zhanna Samsonova. பழங்கள், சூரியகாந்தி விதை முளைகள், பழ மிருதுவாக்கிகள் மற்றும் பழச்சாறுகள்" மட்டுமே சாப்பிட்டு வாழ்ந்து வந்துள்ளார்.
இறப்பு
இந்நிலையில் இவர் கடந்த ஜூலை 21ம் தேதி தென்கிழக்கு ஆசியாவில் ஒரு சுற்றுப்பயணத்தின் போது இறந்துவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால் அவரது அகால மரணம் பட்டினி மற்றும் சோர்வுடன் நீடித்த போராட்டத்தின் விளைவாகும் என்று செய்தி அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.
இதுகுறித்து Zhanna Samsonova வின் தாயார் கூறுகையில் "காலரா போன்ற தொற்றுநோயால்" தனது மகள் இறந்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் அவரின் மரணத்திற்கான அதிகாரப்பூர்வ காரணம் இன்னும் வெளியாகவில்லை.
இதுகுறித்து Zhanna Samsonova வின் நண்பர் கூறுகையில் கடந்த சில நாட்களாக அவர் வீங்கிய கால்களுடன் சோர்வுடன் காணப்பட்டதாக தெரிவித்துள்ளார்.