கொடூரம்: பக்கத்து வீட்டுக்காரருடன் தாய் தகாத உறவு - நேரில் கண்ட மகனுக்கு நேர்ந்த பயங்கரம்!
தகாத உறவில் இருப்பதை பார்த்த மகனை தாய் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தகாத உறவு
மத்தியப் பிரதேச மாநிலம், தாதிபூரை சேர்ந்த தம்பதியினர் தியான் சிங் ரத்தோட் மற்றும் அவரது மனைவி ஜோதி. இவர்களுக்கு 2 குழந்தைகள் இருந்தனர். இதில் 7 வயதான ஜடின் என்ற குழந்தை கடந்த ஏப்ரல் மாதம் வீட்டு மாடியில் இருந்து தவறி விழுந்து இறந்துள்ளார்.
ஜடின் மரணத்துக்குப் பிறகு ஜோதியின் நடவடிக்கையில் மாற்றம் தெரிந்தது. தனது மகனின் ஆவி வீட்டுச் சுற்றி வருவதாகவும், அடிக்கடி மகன் கனவில் வருவதாகவும் ஜோதி கணவரிடம் சொல்லிக் கொண்டிருந்துள்ளார்.
இதனால் ஜோதிக்கு ஒரு வித பயம் ஏற்பட்டுள்ளது. மனைவியின் நடத்தையில் ரத்தோடுக்கு சந்தேகம் வந்தது. ஒரு கட்டத்தில் ஜோதி தனது கணவரிடம் 'மகனை நான் கொலைசெய்ய வேண்டும் என்று நினைக்கவில்லை" என்று கூறி, தன்னுடைய கணவரிடம் நடந்த உண்மையை கூறியுள்ளார்.
மகன் கொலை
பக்கத்து வீட்டில் வசிக்கும் உதய் என்பவருடன் ஜோதிக்கு தகாத உறவு ஏற்பட்டுள்ளது. இருவரது வீடும் அருகில் இருந்ததால், வீட்டு மாடி வழியாக உதய், ஜோதி வீட்டு மாடிக்கு வந்து அடிக்கடி இருவரும் சந்தித்து வந்துள்ளனர்.
மகன் ஜோதி இறந்த அன்று இருவரும் வீட்டு மாடியில் சந்தித்துள்ளனர். இதை ஜோதியின் மகன் பார்த்துள்ளான். அவன் வீட்டில் சொல்லிவிடுவான் என்ற பயத்தில் ஜோதி தனது மகன் ஜடினை மாடியிலிருந்து கீழே தூக்கிப் போட்டுவிட்டதாக' ஜோதி தனது கணவரிடம் தெரிவித்தார்.
இதனை தனது மொபைல் போனில் பதிவு செய்த கணவர் ரத்தோட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். வழக்கு பதிவு செய்த போலீசார் ஜோதியை கைது செய்துள்ளனர்.