மாணவருடன் வலுக்கட்டாயமாக பாலியல் உறவில் பெண் - கோர்ட்டில் கூலாக பதில்!
கல்லூரி மாணவருடன் வற்புறுத்தி உல்லாசத்தில் பெண் ஒருவர் இருந்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
டேட்டிங்
இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்தவர் இமோஜென் புரூக்(30). இவருக்கு டேட்டிங் வலைதளம் மூலம் கல்லூரி மாணவர் ஒருவர் அறிமுகமாகியுள்ளார். இந்நிலையில், சவுதாம்ப்டன் கிரவுன் நீதிமன்றத்தில் இவர்கள் தொடர்பான வழக்கு ஒன்று விசாரணைக்கு வந்துள்ளது.

இதுகுறித்து, பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ராபர்ட் பிரையான் கோர்ட்டில் பேசும்போது, 30 வயது இமோஜென் புரூக், என்னுடைய கட்சிக்காரருடன் பாலியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளார்.
பாலியல் நடவடிக்கை
அதுவும் அவரது ஒப்புதல் இல்லாமலேயே. உடலியல் சார்ந்த கிளர்ச்சி என்பது முழுவதும் ஒப்புதலில் இருந்து வேறுபட்டது. இந்த வழக்கில், இருவரும் டேட்டிங் வலைதளம் வழியே ஒருவருக்கு ஒருவர் அறிமுகம் ஆகியுள்ளனர். புரூக், சற்று பெரிய உருவம் மற்றும் பாதிக்கப்பட்ட நபரை விட வலிமையானவர்.
இந்த சம்பவம் ஹான்ட்ஸ் பகுதியில் சவுதாம்ப்டன் நகரில் உள்ள புரூக்கின் வீட்டில் நடந்து உள்ளது. இதில், மதுபானம் அருந்திய பின்னர் அவர்கள் படுக்க சென்றுள்ளனர். மாணவர் தூங்க வேண்டும் என விரும்பியுள்ளார். ஆனால், புரூக் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட விருப்பம் கொண்டுள்ளார்.
குமுறிய மாணவர்
அதனால், கல்லூரி மாணவரின் கையை பற்றி இழுத்து, அவருடன் பாலியல் உறவில் ஈடுபட்டு உள்ளார். ஆனால், அதற்கு மாணவர் உடன்படவில்லை. எனினும், அதனை கவனத்தில் கொள்ளாத புரூக் 15 நிமிடங்களுக்கு பின்னரே படுக்கையை விட்டு அகன்றுள்ளார். பின்னர் தூங்க சென்றுள்ளார்.
இதில் பாதிக்கப்பட்ட நபர் தூக்கமின்றி தவித்துள்ளார். நம்பிக்கையற்று போயுள்ளார். இந்த சம்பவத்தின்போது, உருவில் தன்னை விட 2 மடங்கு பெரிய, வலிமையான பெண்ணான புரூக்கிடம் இருந்து தன்னால் விலகி செல்ல முடியவில்லை. நான் வன்முறைக்கு ஆளானது போன்று உணர்கிறேன்.
நடந்த விசயங்களை என்னால் நம்பவே முடியவில்லை என மாணவர் புகாரில் தெரிவித்து உள்ளார். ஆனால், ஒப்புதல் இல்லாமல் ஒரு நபருடன் பாலியல் சார்ந்த நடவடிக்கையில் ஈடுபட்ட குற்றச்சாட்டை புரூக் மறுத்து உள்ளார்.
கோர்ட்டில், அந்த சம்பவம் பற்றி தன்னால் நினைவுகூர முடியவில்லை என புரூக் கூலாக பதிலளித்து உள்ளார். இதனை கேட்டு நீதிபதிகள் அதிர்ச்சி அடைந்தனர். கோர்ட்டு அவருக்கு கண்டனம் தெரிவித்து உள்ளது.