கணவன், குழந்தைகளை தவிக்க விட்டு பாகிஸ்தான் ஓடிய பெண், இந்தியா திரும்பினார் - எதற்காக?

Pakistan India Marriage World
By Jiyath Nov 30, 2023 04:07 AM GMT
Report

காதலனை திருமணம் செய்ய பாகிஸ்தான் சென்ற பெண் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார். 

பாகிஸ்தான் சென்ற பெண் 

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் அஞ்சு (34). இவருக்கு அரவிந்த் என்பவருடன் திருமணமாகி இரு குழந்தைகளும் உள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு அஞ்சு, பேஸ்புக் வாயிலாக பாகிஸ்தானை சேர்ந்த நஸ்ருல்லா என்பவருடன் பழகியுள்ளார்.

கணவன், குழந்தைகளை தவிக்க விட்டு பாகிஸ்தான் ஓடிய பெண், இந்தியா திரும்பினார் - எதற்காக? | Woman Went Pakistan Marry Boyfriend Returned India

பின்னர் அது காதலாக மாறவே, தனது கணவரையும் குழந்தைகளையும் விட்டுவிட்டு அஞ்சு பாகிஸ்தான் சென்றார். பின்னர் இஸ்லாம் மதத்துக்கு மாறிய அவர், நஸ்ருல்லாவை திருமணம் செய்து கொண்டு, தற்போது பாத்திமா என்ற புதிய பெயரைக் கொண்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.

இந்தியா திரும்பினார் 

இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வெளியாகின. கடந்த ஜூலையில் 30 நாட்கள் விசாவுடன் அஞ்சு பாகிஸ்தான் சென்றிருந்தார். இந்நிலையில் அவர் மீண்டும் இந்தியா திரும்பியுள்ளார்.

கணவன், குழந்தைகளை தவிக்க விட்டு பாகிஸ்தான் ஓடிய பெண், இந்தியா திரும்பினார் - எதற்காக? | Woman Went Pakistan Marry Boyfriend Returned India

தனது குழந்தைகளை பார்க்க முடியாமல் அவர் தவித்ததாக கடந்த செப்டம்பர் மாதம் நஸ்ருல்லா தெரிவித்திருந்தார். இந்த சூழலில் தன் குழந்தைகளை பார்ப்பதற்காக பாகிஸ்தானிலிருந்து அஞ்சு இந்தியா வந்துள்ளார். வாகா எல்லை வழியாக வந்த அவரிடம், விசாரணை மேற்கொண்ட பிறகு அமிர்தசரஸிலிருந்து டெல்லிக்கு விமானம் மூலம் வந்தார்.