கருப்பு பூனை என நினைத்து கருஞ்சிறுத்தையை வளர்த்த பெண் - செல்லப்பிராணியாக மாறிய லூனா!

World Russia
By Jiyath Sep 28, 2023 10:32 AM GMT
Report

பூனை குட்டி என நினைத்து கருஞ்சிறுத்தை குட்டியை ரஷ்ய பெண் ஒருவர் வளர்த்துள்ளார்.

கருஞ்சிறுத்தை குட்டி

ரஷ்யாவை சேர்ந்த விக்டோரியா என்ற பெண் சைபீரிய காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் கிடந்த பூனைக்குட்டி ஒன்றை கண்டுபிடித்தார். பின்னர் அதனை அங்கேயே விட்டு சென்றால் உயிரிழந்து விடும் என்று நினைத்து வீட்டிற்கு எடுத்து வந்துள்ளார் விக்டோரியா .

கருப்பு பூனை என நினைத்து கருஞ்சிறுத்தையை வளர்த்த பெண் - செல்லப்பிராணியாக மாறிய லூனா! | Woman Raised Panther Thinking Its Cat In Russia

ஆனால் அது பூனைக்குட்டி இல்லை சைபீரியன் ஜூவில் பிறந்த லூனா என்று கருஞ்சிறுத்தை குட்டி என்று அவருக்கு அப்போது தெரியவில்லை. நாட்கள் போக போக லோனாவின் உடல்நிலையில் முன்னேற்றம் காணத் தொடங்கி, அது ஒரு கருஞ்சிறுத்தை குட்டி என்று விக்டோரியாவுக்கு தெரிந்த வந்தது.

இருந்தும் அதன் மீது தான் கொண்ட பாசத்தால் பிரியாமல் கூடவே வைத்துள்ளார்.

ரசிகர்கள்

அந்த சிறுத்தைக்காக @Luna_the_pantera என்ற பெயரில் டிக்டாக் கணக்கு ஒன்றை தொடங்கியுள்ளார். அதில் லூனாவின் அன்றாட செயல்பாடுகளை வீடியோவாக பதிவிட்டு வந்தார். இந்த கருஞ்சிறுத்தை குட்டிக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் உள்ளனர்.

கருப்பு பூனை என நினைத்து கருஞ்சிறுத்தையை வளர்த்த பெண் - செல்லப்பிராணியாக மாறிய லூனா! | Woman Raised Panther Thinking Its Cat In Russia

ஆனால் லூனா ஒரு வனவிலங்கு, அது எந்த நேரத்தில் எப்படி நடந்து கொள்ளும் என்பது தெரியாது. முறையாக பராமரிக்காவிட்டால், சக்திவாய்ந்த அதன் உடலமைப்பும், கூர்மையான பற்களும் எந்த சமயத்திலும் ஆபத்தை ஏற்படுத்தும்.

ஆனால் லூனா சிறு வயதில் இருந்தே வீட்டிலேயே வளர்ந்ததால், மற்ற சிறுத்தைகள் போல் இல்லாமல் மிகவும் சாந்தமான விலங்காக இருக்கிறது.