நகரும் நடைபாதையில் சிக்கிய பெண்; கால் துண்டான பரிதாபம் - அதிர்ச்சி சம்பவம்!
நகரும் நடைபாதையில் சிக்கிய பெண் ஒருவர் தனது இடது காலின் ஒரு பகுதியை இழந்துள்ளார்.
நகரும் நடைபாதை
பாங்காக்கில் டான் முயாங் சர்வதேச விமான நிலையம் உள்ளது. அதில் பெண் ஒருவர் நகோன் சி தம்மரத் மாகாணத்திற்கு விமானத்தில் செல்ல இருந்தார். அப்போது, இரண்டாவது உள்நாட்டு முனையத்தின் கேட் 4 மற்றும் கேட் 5 இடையே உள்ள தெற்கு காரிடாரில் உள்ள நகரும் நடைபாதையில் சென்றார்.
அவர் சூட்கேஸ் மீது தடுமாறி விழுந்ததால், அவரது கால் நகரும் நடைபாதையில் சிக்கி இழுக்கப்பட்டுள்ளது. இதனால் அந்தப் பெண் கதறி துடித்துள்ளார். உடனே சம்பவ இடம் விரைந்த விமான நிலைய ஊழியர்கள், முதலுதவி கொடுத்து சிகிச்சை அளித்தனர்.
துண்டான கால்
பின்னர் அப்பெண்ணின் கால் தனியாக துண்டானது. மருத்துவர்கள் அப்பெண்ணையும் அவரின் காலையும் மீட்டனர். அதன்பின், மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். அறுவைசிகிச்சை நிபுணர்கள் மூட்டுகளை மீண்டும் இணைத்துள்ளனர்.
ஆனால் அவளால் இடது காலின் முன்பு போல இயக்க முடியாது என்று தெரிவித்துள்ளனர். இந்த விபத்துக்குப் பிறகு, விமான நிலையத்தில் உள்ள அந்த நகரும் நடைபாதைகள் தற்காலிகமாக மூடப்பட்டது. தொடர்ந்து திகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர்.