Wednesday, Jun 25, 2025

5வது திருமணம் செய்ய போன மனைவி; பதறி ஓடிய கணவன் - இறுதியில் என்ன நடந்தது?

Marriage Crime Kanyakumari Dindigul
By Sumathi 8 months ago
Report

இளம்பெண் ஒருவர், 5வது திருமணம் செய்ய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

5வது திருமணம் 

திண்டுக்கல், எரியோடு பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் கட்டிட வேலை பார்த்து வருகிறார். இவர் தன்னுடைய உறவினர்களுடன் கன்னியாகுமரி, இரணியல் கவால் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார்.

kanyakumari

அதில், "நான் கட்டிட வேலை பார்த்து வருகிறேன். திருமணமாகி, மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர். சம்பவத்தன்று வேலைக்கு சென்று விட்டு, வீட்டுக்கு திரும்பியபோது, என்னுடைய மனைவி மாயமாகி இருந்தார். எனவே, காணாமல் போன மனைவியை கண்டுபிடித்து தரவேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

5வது காதலியை கழட்டிவிட்ட 92 வயது பிரபல நபர் - அடுத்த பெண்ணுடன் உல்லாச டேட்டிங்!

5வது காதலியை கழட்டிவிட்ட 92 வயது பிரபல நபர் - அடுத்த பெண்ணுடன் உல்லாச டேட்டிங்!

போலீஸார் அறிவுரை

இதன் அடிப்படையில் போலீஸார் விசாரித்ததில், பேயன்குழி பகுதியை சேர்ந்த ஒரு இளைஞரை சந்திக்க, மனைவி கிளம்பி வந்திருப்பதும், அந்த இளைஞருடன் அவருக்கு திருமணம் நடக்க உள்ளதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து போலீசார் அந்த பெண்ணையும், இளைஞரையும், அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர்.

5வது திருமணம் செய்ய போன மனைவி; பதறி ஓடிய கணவன் - இறுதியில் என்ன நடந்தது? | Woman Left Her 4Th Husband For Affair Kanyakumari

அந்த பெண்ணுக்கு ஏற்கனவே 3 முறை திருமணம் ஆகியுள்ளது. தற்போது புகாரளித்துள்ளவர்தான் 4வது கணவன். அவர், தினமும் குடித்துவிட்டு, வீட்டுக்கு வந்து தன்னை தாக்குவதாகவும், அவரது செயல்பாடுகள் பிடிக்காமல்தான், தன்னுடன் வேலை செய்த இளைஞரை 5வது திருமணம் செய்ய முடிவு செய்ததாக தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து கணவர், 2 குழந்தைகளுடன் மீண்டும் இணைந்து வாழ போலீஸார் அறிவுறுத்தியுள்ளனர். இருப்பினும் அந்த பெண் கணவர் மற்றும் 2 குழந்தைகளை உதறிவிட்டு அந்த இளைஞருடனேயே சென்றுள்ளார்.