கள்ளக் காதலனின் 11வயது மகனை கொடூரமாக கொலை செய்த இளம் பெண் - அதிர்ச்சி பின்னணி!
சிறுவன் கொலை
கடந்த 2019ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த பூஜா குமாரி மற்றும் ஜிதேந்தர் ஆர்யா ஆகியோர் ஒரு கோவிலில் திருமணம் செய்து கொண்டனர். ஜிதேந்தருக்கு ஏற்கனவே திருமணமாகி 11 வயத்தில் ஒரு மகன் உள்ளார்.
ஆனால் முதல் மனைவியிடம் விவாகரத்து பெறாமல் இவர்கள் செய்து கொண்ட திருமணம் செல்லாது என்பதால் இருவரும் லிவ்-இன் ரிலேஷன்ஷிப் ஒரு வாடகை வீட்டில் தங்கி வந்துள்ளனர். முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெற்று பூஜாவை சட்டப்படியான திருமணம் செய்து கொள்கிறேன் என்றும் ஜிதேந்தர் பூஜாவிடம் உறுதியளித்துள்ளார்.
இந்நிலையில் விவாகரத்து தொடர்பாக இருவருக்கும் இடையில் அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் தகராறு அதிகரிக்க கடந்த டிசம்பர் மாதம் ஜிதேந்தர், பூஜாவிடம் இருந்து பிரிந்து வீட்டை விட்டு வெளியேறி தனது முதல் மனைவி மற்றும் மகனிடம் சென்றுள்ளார். இதனால் ஆத்திரமடைந்துள்ளார் பூஜா. அவரது மகனால் தான் அவர் முதல் மனைவியிடம் இருந்து விவாகரத்து பெறாமல் தன்னை விட்டு பிரிந்ததாக பூஜா கருதியுள்ளனர்.
பெண் கைது
இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் 10ம் தேதி பூஜாவுக்கும், ஜிதேந்தருக்கும் பொதுவான ஒரு நண்பனின் உதவியுடன் இந்தர்புரியில் என்ற இடத்தில் ஜிதேந்தர் வீடு இருப்பதை தெரிந்து கொண்டு பூஜா அங்கு சென்றுள்ளார்.
கதவு திறந்திருந்த நிலையில் உள்ளே நுழைந்த பூஜா தூங்கிக்கொண்டிருந்த சிறுவனை கழுத்தை நெரித்து கொலை செய்து பெட்டி படுக்கைக்குள் உடலை ஒளித்து வைத்துள்ளார். மருத்துவமனைக்கு சிறுவனை கொண்டு வந்தபோது கழுத்து நெரித்து கொலை செய்திருக்கிறார் என்ற தகவல் போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்.
ஆனால பூஜா தலைமறைவாகியுள்ளார். பின்னர் ஜிதேந்தரிடம் விசாரணை செய்து சிசிடிவி காட்சிகளின் உதவியுடன் மேற்கு டெல்லியில் உள்ள பக்கர்வாலா பகுதியில் பூஜா குமாரி கைது செய்யப்பட்டார்.